Showing posts with label கோணேஸ்வரன் தனுகாந்த். Show all posts
Showing posts with label கோணேஸ்வரன் தனுகாந்த். Show all posts

Friday, December 18, 2009

மேரிமாதா படத்தில் தோன்றிய அற்புதத் திருக் கை! - திருகோணமலையில்.


அண்மையில் திருகோணமலையையே ஸ்தம்பிதம் செய்த ஒரு நிகழ்வு...


திருகோணமலையில் உள்ள பத்தாம் நம்பர் எனும் இடத்தில் (பத்தாம் குறிச்சி) உள்ள நடுத்தர வீடொன்றில் அன்னை மாதாவின் உருவப்படம் ஒன்று இருந்திருக்கிறது.


கடந்த 14.12.2009 (திங்கள் இரவு) அன்று திருகோணமலையில் பெய்த கடும் மின்னல், இடி, காற்று என்பவற்றுடன் கூடிய கடும் மழை காரணமாக ஏற்பட்ட மின்னல் ஒன்றின் போது தோன்றிய ஒளிக்கீற்று தமது வீடிற்குள் வந்ததாகவும் அதன் பின்னர் மாதாவின் உருவப்படத்தைத்தாங்கியவாறு இரண்டு ஒளி பொருந்திய கைகள் படத்திற்குள் வந்ததாகவும் வீட்டு உரிமையாளர்கள் கூறுகிறார்கள்.





இதில் என்ன ஒரு வியப்பு எனக்கு என்றால் இந்த சம்பவத்தின் பின்னர் தான் திருகோணமலையில் எத்தனை வேலையற்ற மக்கள் உள்ளார்கள் என்று கணக்கிட்டுக்கொண்டேன். நான் உள்ளடங்கலாக.

மற்றும் எனக்கு என்ன வருத்தம் அல்லது ஆதங்கம் என்றால் இது ஒரு திட்டமிடப்பட்ட செயல் என்பதை மக்கள் ஏன் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள் என்பதுதான்.

நான் ஓர் இந்து அதற்காகப் பிள்ளையார் பால் குடிக்கிறார் அல்லது தலையில் இருந்து திருநீறு வருகிறது, காளியின் முடி வளர்கிறது என்றாலோ நம்புகின்றவன் அல்ல.

மனிதன் விலங்குகளுக்குள் உள்ளங்டகினாலும் இயற்கையில் அவனுக்கு மேலதிகமாக ஆறாவது அறிவொன்று உள்ளது என்பது எம்மில் எத்தனை பேருக்குத்தெரியுமோ தெரியாது.


என் கருத்துக்கள் முழுக்க முழுக்க இதனை ஒரு அற்புதம் என்று நம்பி வதந்தி பரப்பித்திரிபவர்களுக்கே குறியானது.


தயவுசெய்து 6வது அறிவாக பகுத்தறிக்வைகொண்ட மனிதர்களாக செயற்படுங்கள்.


சில கருத்துக்கள்:


இது மேற்குலக நாடுகளின் ஒரு திட்டமிட்ட செயல்.

ஏனெனில் இது ஏலவே இவ்வாறு மழையின் போது தோன்றத்தக்கதாக சில இரசாயனக்கலவைகளைப்பயன்படுத்தித்தயாரிக்கப்பட்டதொரு ஓவியம்.


இது போன்று ஈராக் யுத்தத்தின் போது வானில் இருந்து விழும் குண்டுகளைத்த்தாங்கியவண்ணம் யேசுநாதர் வானில் தோன்றுவதாக ஒரு செயற்கைத்திட்டம் தீட்டப்பட்டத்தையும் மக்கள் அதனை நம்பி ஏமாந்ததையும் ஒருவர் எனக்கு ஞாபப்படுத்தினார்.


அதுமட்டுமல்லாது அண்மையில் இந்தியாவின் தமிழ்நாட்டில் நடராஜர் மலையின் மேல் கோபத்தாண்டபம் ஆடுவதாக சித்தரிக்கப்பட்டதையும் நினைவுபடுத்தினார்.


குட்டிச்செய்தி :

இந்தப் புகைப்படம் மடுமாதா திருத்தலத்தில் வாங்கப்பட்டதாம்.

மேலும் திருகோணமலையில் இதற்கு முன்னர் பிள்ளையார் பால் குடித்த்ததும் இந்த வீட்டில் தானாம்.

இது நாத்திகவாதிகளுக்கு நான் போடும் தீனி.

மாற்றுக்கருத்து உள்ளவர்கள் தாரளமாக எதிர்ப்புக்களைத்தெரிவிக்கலாம்.

உடனுக்குடன் பதிலளிக்க நான் காத்திருக்கிறேன்.

தயவுசெய்து வதந்திகளைப்பரப்பாதீர்கள்.


--
கோணேஸ்வரன் தனுகாந்த்




நண்பர்களே நான் வட்டமிட்டிருக்கும் இடத்தை நன்கு கவனியுங்கள்

இது ஒரு சந்தேகம் மட்டும் தான்
இந்த சந்தேகம் எனக்கு வரக்காரணம் என் நண்பன்தான்



சந்தேகம்:


உருவில் தோன்றிய கைகள் மாதாவின் படத்தில் கீழ்ப்பகுதியை மறைத்து 3D effect இல் இருந்தும் கீழே மூலையில் இருந்த logo வை ( அது கண்ணாடி மேல் பொறிக்கப் படவில்லை ) மறைக்கவில்லை. இது என்... சிந்தனை தான் நண்பர்களே நீங்கள் இந்தக் கோணத்திலும் வேறு கோணத்திலும் யோசியுங்கள்



பிந்திக்கிடைத்த தகவல்:

நண்பர்களே ஒரு நல்ல செய்தி

பாலையூற்றில் தோன்றிய இந்த மாதா உருவம் ஒரு திட்டமிட்ட சதி என்பதை பளையூட்ட்றை சேர்ந்த ஒரு பாதிரியார் ஒப்புக்கொண்டுள்ளார். அவர் மக்களுக்கு அது ஒரு பொய் என்று உரைத்துள்ளார்


--
தி. அனோஜன்