Sunday, December 28, 2008

அம்மா பகவான் விபசாரம்


இப்போது அதிகமாகப் பேசப்படும் பாபா அல்லது நட்சத்திரம் ‘அம்மா பகவான்’.



இந்த அம்மா பகவான் கலாச்சாரம் எங்கு பார்த்தாலும் சூடு கிளப்பபுகிறது. யாரிந்த அம்மா பகாவன் என்பதை தெரிந்து கொள்ள என் நண்பனொருவனை அணுகினேன். அவனிடம் விசாரித்தபோது அவன் சொன்னான் ‘அம்மா பகவான் கல்கி அவதாரம்’ என்றும் , பல அற்புதங்கள் செய்துள்ளார் என்றும் அவருக்குப் பல்லாயிரம் பக்தர்கள் உள்ளார்கள் என்றும் பக்தி ததும்பச் சொன்னான். நானும் ஏதோ வியந்தது போல் முகத்தை வைத்துக்கொண்டு ‘ஆ! அப்படியா…..!’ என்று சொல்லிவிட்டு விடைபெற்றேன்.அவன் சொன்னபின் எனக்கிருந்த குழப்பமெல்லாம் அம்மா பகவானை நம்பலாமா நம்பக்ககூடாதா என்பதல்ல, ஒரு தனிமனிதன் பல்லாயிரக்கணக்கான மக்களை எப்படி ஏமாற்றுகிறான் என்பதுதான். பின் இந்த விடயத்தை மூளையில் புதைத்துவிட்டேன்.


பின்பு ‘இந்த கடவுள் (பம்மாத்து) ஜோடிகளின் கள்ள வேலைகள் பற்றி சத்தியண்ணா எடுத்துச் சொன்னார். அண்மையில் ‘கள்” குழுமத்தின் சந்திப்பில் அம்மா பகவான் முடியும் இழுக்கப்பட்டது. அப்போதுதான் இந்த அம்மா பகவானால் ஏற்படும் பாரதூர விளைவுகளை என்னால் அறிய முடிந்தது. இறுதியாக அங்கு என்னதான் நடக்கிறது என்று பார்ப்பதற்காக ‘கள்” நண்பர்கள் சிலருடன் திருகோணமலை உவர்மலையில் அம்மா பகவான் பஜனை நடக்கும் இடத்துக்குச் சென்றேன்.


மாலை 5 மணி இருக்கும் நானும் நண்பர் பிரசாந்தனும் முதலில் சென்றோம். சிறிது நேரத்தின் பின் தோழர்கள் சத்தியன், மு. மயூரன் இருவரும் வந்தார்கள். அங்கு சுமார் 15-20 வரையான நடுத்தர வயதுப் பெண்களும், சில இளைஞர் யுவதிகளும் இருந்தார்கள். நாம் கடைசி வரிசையில் உட்கார வைக்கப்பட்டோம். பின் அவர்கள் தங்கள் செயல்களைத் தொடங்கினார்கள். அவர்களின் இம்சையான செயல்களைப் பார்த்து ஒருவரை ஒருவர் பார்த்து நகையாகச் சிரித்துக்கொண்டோம். ஏதோ சில மந்திரங்களையும் (ஒலிவடிவம்), மனதைச் சாந்தப்படுத்தும் யோகாக்களையும் சொல்லித்தந்தனர்.


இந்த யோகாக்களினாலும் மந்திரங்களினாலும் சிலவேளை மனது சாந்தப்படலாம். ஆனால் இதன்பின் அம்மா பகவான் இல்லை விஞ்ஞானம் உள்ளதை நண்பர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.அதில் பெரிய பகிடி என்னவென்றால் அங்கே பஜனை நடக்கும்போது மின் துண்டிக்கப்பட்டிருந்தது. மெல்லிருட்டிலேயே பஜனை நடந்தது. பின் பஜனை முடியும் தறுவாயில் ஒரு தலைமையம்மா “அம்மா பகவானிட்ட வரம் கேக்கிறவங்க அமைதியா கேளுங்க” என்றதும் அனைத்து பக்தர்களும் (சுயநலவாதிகளும்) கேட்கத்தொடங்கினர். அப்போதுதான் துண்டிக்கப்பட்ட மின்சாரம் சரிசெய்யப்பட்டு வந்தது. அப்போது அந்த தலைமையம்மா “பார்த்தீங்களா அம்மா பகவான் அருளை” என்று சொன்னதும் எனக்கு சிரிப்பு பீறிட்டுக்கொண்டு வந்தது இருந்தாலும் முயற்சி எடுத்து அடக்கிக்கொண்டேன்.ஆனால் மின் துண்டிக்கப் பட்டதிலும் பின் இணைப்பு வந்ததிலும் இது விதியா? அல்லது சதியா? என்பதில் எனக்கு மலையளவு சந்தேகம்.


என் இனிய அறிவுமிக்கத் தோழர்களே! மனிதாகப்பிறந்த நாம் ஏன் இன்னொரு மனிதனை வணங்க வேண்டும். நீங்கள் இன்னொரு மனிதனை மரியாதை செய்யுங்கள் ஆனால் வணங்காதீர்கள்.


தோழர்களே! இந்த அம்மா பகவான் தன்னை கல்கி அவதாரம் என்கிறார் (பலர் தம்மை கல்கி அவதாரம் என்கிறார்கள் அது வேறுகதை) எங்கேயாவது கடவுள் தன்னைத்தானே சுயபிரகடனம் செய்வார்களா? அவர் தானே கடவள் என்று சுயப்பிரகடனம் செய்து கொண்டு மிக அதிகமான சொத்துகளைச் சேர்த்துக்கொள்கிறார். மக்களின் பணத்தை பறித்துக்கொள்கிறார். அம்மா பகவானைப் பார்ப்பதற்கு 10000 ரூபா பேசுவதற்கு 20000ரூபாவாம் அப்படியானால் படுப்பதற்கு………………..

அம்மா பகவானை காசுகட்டிப் பார்த்தவர்களினதும் பார்க்கப்போகிறவர்களினதும் வாதம் என்னவென்றால் அம்மா பகவானுக்கு காசுகொடுத்துப் பார்த்தால் அந்த காசு பலமடங்கு திரும்பக்கிடைத்துவிடும் என்பதுதான். காசு காசு என்று அலையும் சுயநலாவதிகளே இயலுமானவரை அறிவுள்ள சுயநலவாதிகளாக இருங்கள்.

பகவான் அன்பானவர்தானே. அப்படியானால் பகவானுக்குத்தேவை அன்புதானே ஒழிய காசில்லையல்லவா?. பகவானுக்கு அன்பிருந்தால் காசைக் கொடுக்கவேண்டியது தானே அதேன் முதலில் காசை வேண்டி பின்பு பல மடங்காகத்தருவது. கடவுள் என்ன சீட்டுக் கம்பனியா நடத்துகிறார். அங்கேயாவது நமக்கு குறிப்பிட்டகாலத்தில் எவ்வளவு கிடைக்கும் என்பது தெரியும். ஆனால் இங்கே நாம் காசு கொடுப்பது தெரியும் ஆனால் அது எப்போது பலமடங்காகக் கிடைக்கும் என்பது தெரியாது. இந்த 10000ரூபாவை அல்லது 20000ரூபா வங்கியில் வைப்புசெய்தால் சிறிதளவு வட்டியாவது குறிப்பிட்ட காலத்துக்குள் கிடைக்கும். வங்கி அம்மாபகவான் போல ஏமாற்றவும் மாட்டாது. அங்கே ரசீது கொடுப்பார்கள் கண்காய்வு செய்வார்கள் சட்டப்பாதுகாப்பாவது இருக்கும்.


நல்வாழ்வை விரும்பும் நண்பர்களே! எந்தக் கடவுளாவது தன்னை பார்ப்பதற்கோ பேசுவதற்கோ காசு கேட்குமா?


பக்தனுக்கும் கடவுளுக்கும் உள்ள தொடர்பு விபச்சாரிக்கும் உறவாளருக்கும் உள்ள தொடர்பா? பக்தி ஒன்றும் விபச்சாரவிடயம் இல்லை என்பதை தோழர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.


ம்…சரி உங்கள் வாதப்படியே வைத்துக் கொள்வோம். அவர் கடவுள்தான்… அப்படியானால் சுனாமிப்பேரலை வருவதற்கு முன் சுனாமி வருகிறது என்று சொல்லி பல இலட்சம் உயிர்களைக் காத்திருக்கலாம் தானே. சுனாமி வருவது அமெரிக்க விஞ்ஞானிகளுக்குத் தெரிந்தளவு ஏன் அம்மா பகவானுக்குத் தெரியவில்லை. பக்தர்களிடமிருந்து கோடிகோடியாகப் பணத்தை எடுக்கும் அம்மா பகவான் ஏன் நிவாரணம் கொடுக்கவில்லை. சுவாமி சுனாமி நிவாரணம் கொடுக்கக் கூடாது என்பது சட்டமா?


சரி உங்கள் அம்மா பகவான் ‘கல்கி’ அவதாரமோ ‘கல்கண்டு’ அவதாரமோ ‘ஆனந்த விகடன்’ அவதாரமோ சக்தியுள்ள அவதாரம் என்றால் எமது உள்நாட்டு பிரச்சினையும் உள்நாட்டு யுத்தத்தையும் முடிவுக்குக் கொண்டு வந்து துன்பப்படும் மக்களை ரட்சிக்கட்டுமே. அவ்வாறு நடந்தால் நானே அம்மாபகவானுக்கு பலகோடி பக்தர்களை சேர்க்கப்பாடுபடுவேன்.



இந்த அம்மா பகவான் பின்னணியில் மாபெரும் உளவுத்துறை செய்றபடுவதாக எனக்குத் தோன்றுகிறது. இந்த அம்மா பகவான் பின்னணியில் ஒரு உளவுத்தறை பின்னிருந்தால் அதனால் ஏற்படும் விளைவுகள் எவ்வளவு பாரதூரமானவை. இந்த உளவு நிறுவனங்கள் அம்மா பகவானூடாக எமது மக்களைச் சிந்திக்கவிடாமல் பக்தி என்ற பத்தடி வளவுக்குள் எம் மக்களின் மூளையை புதைக்க முற்படுகின்றனர். எமது மக்களைச் சுயநலவாதிகளாக்குகின்றனர்.மற்றும் இந்த உளவு நிறுவனங்கள் அம்மா பகவான் மூலமாக எமது மக்களின் தேவை என்ன? அவர்கள் எதை எதிர்பார்க்கிறார்கள் என்பதை அறிந்து எம்மீது ஆதிக்கம் செலுத்தி தம் நிகழ்ச்சிநிரல்களை எம்மூடாக நகர்த்துவார்கள். அன்பானவர்களே! அம்மா பகவானை வணங்கி அந்நிய ஆதிக்கத்தை உட்செலுத்திவிடாதீர்கள்.


வாருங்கள் தோழர்களே அம்மா பகவான் அழுக்குகளைக் கழுவுவதற்கு
--
வி. புருஷோத்மன்

43 comments:

Sathis Kumar said...

என் பதிவு : http://olaichuvadi.blogspot.com/2008/12/blog-post_9113.html

தமிழன்-கறுப்பி... said...

இவை எப்ப திருகோணமலைக்கு வந்தவை...

வெண்காட்டான் said...

இவன் அண்ணா நகரில் 90களின் நடுப்பகுதியில் ஆச்சிரம்தில் இருந்தான் அப்போது அவன் வடிவம் தனியாக கல்கி பகவான். மஞ்சள் ஆடை. இவன் மட்டும் தான. பெண்களை ஆச்ரிரமத்திதோடு இணைத்து வீட்டுக்க அனுப்புவத்ில் என்ற குற்றச்சாட்டு காரணமாக இவன் கைது செய்யப்படடான் . இதன் பின் இவன் மனைவியுடன் சேர்ந்து ஆரம்பித்த அம்்மா பகவான் கூத்து. இதில் அதிகம் பித்து பிடித்து அலைபவர்கள் இலங்கை தமிழர்கள் தான். இப்படி பல வழிகளில் இந்து வெறி தமிழர்களை விழுங்கிக்கொண்டிருக்கிறது. இவனை கேலி பண்ணியே காதலா காதலா படத்தில் சில காட்சிகள் அமைக்கப்படிருந்தன.

Anonymous said...

இப்போ புதுசா ஒரு திருட்டு அம்மா வேலூரில் முளைச்சிருக்குது.

இந்த சாயி பாபா மட்டும் என்னவாம்? பெரிய திருடன்!

இவனுங்களை எல்லாம் நடு தெருவுல நிக்க வச்சி சுடனும்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//சரி உங்கள் அம்மா பகவான் ‘கல்கி’ அவதாரமோ ‘கல்கண்டு’ அவதாரமோ ‘ஆனந்த விகடன்’ அவதாரமோ சக்தியுள்ள அவதாரம் என்றால் எமது உள்நாட்டு பிரச்சினையும் உள்நாட்டு யுத்தத்தையும் முடிவுக்குக் கொண்டு வந்து துன்பப்படும் மக்களை ரட்சிக்கட்டுமே. அவ்வாறு நடந்தால் நானே அம்மாபகவானுக்கு பலகோடி பக்தர்களை சேர்க்கப்பாடுபடுவேன்.//

தங்களைக் கடவுள் என்பவர்களிடமும்,கடவுள் அவதாரம் என்பவர்களிடமும் நான் கேட்பது இதுவே!!

ரவி said...

இலங்கையிலுமா ?

Pirasanth P said...

hi bro

if u don't like to pray any of human then just leave.u take him as “Kuru” ok ….. it ll help u …..

p.pirasanth

மு. மயூரன் said...

//if u don't like to pray any of human then just leave.u take him as “Kuru” ok ….. it ll help u …..
//

இப்படி எல்லாம் எதாவதொரு காரணத்தை சொல்லி, சமாளித்து இந்த சமூக விரோதியின் சுரண்டல் ராச்சியத்தை காப்பாற்றுவதற்கென்றே ஒரு கூட்டம் அலையுது.

1. கல்லையும் கூடத்தான் நண்பனாயும், குருவாயும் நினைத்து எம்மை ஒருமுகப்படுத்தி தொழலாம். இந்த விபசாரியை ஏன் குருவாகநினைக வேணும்?

2. தன்னை கல்கி அவதாரம் என்றும் கடவுளாகவும் பிரகடனப்படுத்திக் கொண்டதிலேயே இவனின் ஏமாற்று முகமூடி கிழிகிறது.

3. இப்படி இவனையும் அவன் துணைவியையும் "ஏதாவதொன்றாக" நினைத்து வழி படுவதால், கூட்டம் சேர்ப்பதால், அவனுக்கு பின்னால் அலையும் கூட்டம் அதிகரித்து அவனது சமூக விரோத சுரண்டல் ராச்சியம் ஓங்குமேயொழிய மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படாது.

4. தன்னைப் பார்க்க பத்தாயிரம் ரூபா கேட்கும் விபசாரியை எல்லாம் குருவாய் நினைத்து வழிபடுமளவுக்கு மூடர்களாகவும் மந்தைகளாகவும் மக்களை வைத்திருக்கத்தான் நீங்கள் விரும்புகிறீர்கள்

Expatguru said...

இவர்கள் இலங்கையிலும் இப்படி ஆரம்பித்து விட்டார்களா? ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள். கடவுளை மட்டும் நம்புங்கள், தானே கடவுள் என்று கூறிக்கொள்ளும் இது போன்றவர்களை சமூக குற்றவாளிகயாக‌ மக்கள் ஒதுக்கி தள்ள வேண்டும்.

இறக்குவானை நிர்ஷன் said...

காலத்துக்குத் தேவையான பதிவுதான். செந்தழல் ரவி இலங்கையிலுமா எனக் கேட்டிருந்தார்....

இங்கு ஒரு கேலிக்கூத்தாக இது நடைபெற்றுவருகிறது. பக்தர்களிடம் ஆயிரக்கணக்கில் பணம் வாங்கி அம்மா பகவான் திருக்கல்யாணம் எனக்கூறி கொள்ளையடித்துச்செல்லும் கூட்டம் அதிகமாகிக்கொண்டே வருகிறது.

அண்மையில் கல்விப் பொதுத்தராதர சாதாரணதர மாணவர்களுக்காக அரசாங்கப் பரீட்சை நடைபெற்றது. அதன்போது மாணவர்கள் சிறந்த பெறுபேற்றைப் பெற அம்மா பகவானின் வித்யா மாலை என்ற ஒன்றை அணிய வேண்டும் என வீடு வீடாக பல குழுக்கள் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தன.

வேடிக்கை என்னவென்றால், ஒரு மாணவனை அல்லது அவனது பெற்றோரை ஏமாற்றி அந்த மாலையை அணிவித்துவிட்டால் பிரசாரம் செய்பவருக்கு 100 ரூபா வழங்கப்பட்டது.

என்ன கொடும சரவணா?????

மடையர்களின் உலகம் இருக்கும்வரை யாருக்குத்தான் முன்னேற முடியாது???

Anonymous said...

தேவையான பதிவு நன்றி.

Unknown said...

what a stupid questions these foolish persons who are asking if baba has power then why he is not controlling social evils.

Same idiots why not ask a super islamic country porkistan claims to be true followers of islam not able to control terrorists. all evils are in pakistan which is a muslim country.

tell one muslim country which has any democracy, any human value. all cruel monarchy type administration prevailing in those countries. womens are treated as slaves and not allowed education in those countries.

but still there are so many foolish islamic clerics propagating their relegion with huge money pumped in from middle east.

why you people not exposing their evil activites, becaue you people have fear from them. if you expose then u will be eleminated by terrorists

தமிழ்பித்தன் said...

இலங்கையிலுமா.....
கனடாவிலே தாங்க முடியல குளிரைச் சொல்லல ஆம்மா பகவான் காய்சலைச் சொன்னேன்.

ஒரு தடவை என்னுடன் காலேஐ்க்கு உள்நுழை பரீட்சை எழுத வந்த எனது சகதோழி ஒருத்தி பரீட்சைக்கு முன் அவர்களின் படத்தை எடுத்து வணங்கும் போதுதான் தெரியும் இப்பிடி ஒரு ஆசாமி இருக்கா என்று பின் இங்க ஒரு ஆச்சிரம்த்துக்கு சென்றதும் அங்க எமது தலையில் அவாந்தை கால் என்று கூறி ஒன்றை வைத்ததயும் பொறுக்க முடியவில்லை.

எவ்வேளையிலும் தனிமனிதனை வணங்காதீர்கள்.

இன்னொரு கொசுறு இவாவிடம் பெண் பக்கதர்கள் தானாம் அதிகம்.

தமிழ்பித்தன் said...

எனது பின்னூட்டம் எந்தவகையிலும் விவேகனந்தர் போன்ற ஆன்மீக வாதிகளை கருத்தில் கொள்ளவில்லை

சாந்தி நேசக்கரம் said...

""நல்வாழ்வை விரும்பும் நண்பர்களே! எந்தக் கடவுளாவது தன்னை பார்ப்பதற்கோ பேசுவதற்கோ காசு கேட்குமா?""

இதைத்தான் நானும் கேட்கிறேன். கடவுள் எங்காவது காசு கேட்குமா ?

ஐரோப்பாவில் (டென்மார்க்கிலிருந்து) ஒரு அம்மணிச்சாமி தன்னை அபிராமியம்மா இதோ டிசம்பர்31 புதுிதாக அவதரிப்பதாக சொல்லி வாயாலை வீணி வடிச்சு முளியைப்பிரட்டுவா அதை எங்கடை தமிழ்ரீவிகளெல்லாம் படம் புடிச்சுப்போட்டு அபிராமியம்மாவுக்கு பணத்தை கொட்ட மக்களை வழி செய்து கொடுக்கின்றார்கள்.

இதோ நாளை மறுதினம் அபிராமியம்மா டென்மார்க்கிலை அவதரிக்கப்போறாவாம். இவ அணிந்த செருப்பை தற்போது நாடுநாடாக கொண்டு போய் பக்த கோடிகள் பாத(செருப்பு)பூசை செய்கினம்.

இந்தச் சுத்துமாத்து அபிராமி சாமியை ஐரோப்பிய அவலம் தொடர் நாடகப் பகுதியில் சேர்த்திருந்தோம். ஆனால் அபிராமியம்மாவின் பக்த கோடிகள் நாடகத்தை எழுதியவருக்கும் நாடகத்தில் பங்கேற்றவர்களுக்கு சாபம் விட்டதும் மிரட்டல் விட்டதும் பெரிய கதை.

நேரமிருக்கேக்க அபிராமி(கிபீராமியம்மா) நாடகத்தை கேட்டுப்பாருங்கோ.
இதோ அந்த இணைப்பு

http://www.tamilnews24.com/twr/audio/sathiri/avalam12.smil

மேலும் பல நாடகங்கள் இத்தகைய சுத்துமாத்துக்கள் பற்றி கேட்க இந்த லிங்கில் போய் பாருங்கள்

http://tamilnews24.com/twr/radio/avalam.html

ஏமாறுவோர் உள்ளவரை இத்தகைய ஏமாற்றுக்காரர்கள் இருப்பார்கள்.

சாந்தி

SurveySan said...

ஆதாரபூர்வமா ஏதாவது மேட்டர் எழுதியிருப்பீங்கன்னு வந்தா, சப்புன்னு போயிடுச்சு.

களவாணிகளை அகற்றுதல் தேவையான ஒன்று.

ஆனா, 'உங்களுக்குத் தோணுதுங்கரதுக்காக' அவசரப்பட்டு விபசாரம் அது இதுன்னு சொல்லரது சரியில்லை.

சாயிபாபா செய்த உட்டாலக்கடிக்கு யூ.ட்யூபில் ஆதாரம் இருக்கு, அந்த மாதிரி இந்த பகவானுக்கும் யாராவது லாடம் கட்டி ஆதாரங்களை வெளியிட்டா, ஓரளவுக்கு நம் பக்தர்கள் திருந்துவார்கள்.

உண்மையான சாய்பாபா பக்தர்கள் யாராவது அந்த யூ.ட்யூபெல்லாம் பாத்து திருந்தியிருக்காங்களா? ;)

///இந்த அம்மா பகவான் பின்னணியில் மாபெரும் உளவுத்துறை செய்றபடுவதாக எனக்குத் தோன்றுகிறது. இந்த அம்மா பகவான் பின்னணியில் ஒரு உளவுத்தறை பின்னிருந்தால் அதனால் ஏற்படும் விளைவுகள் எவ்வளவு பாரதூரமானவை. இந்த உளவு நிறுவனங்கள் அம்மா பகவானூடாக எமது மக்களைச் சிந்திக்கவிடாமல் பக்தி என்ற பத்தடி வளவுக்குள் எம் மக்களின் மூளையை புதைக்க முற்படுகின்றனர். எமது மக்களைச் சுயநலவாதிகளாக்குகின்றனர்.மற்றும் இந்த உளவு நிறுவனங்கள் அம்மா பகவான் மூலமாக எமது மக்களின் தேவை என்ன? அவர்கள் எதை எதிர்பார்க்கிறார்கள் என்பதை அறிந்து எம்மீது ஆதிக்கம் செலுத்தி தம் நிகழ்ச்சிநிரல்களை எம்மூடாக நகர்த்துவார்கள்./////

Suresh Kumar said...

தமிழ் நாட்டில் தான் மூடநம்பிக்கை முட்டாள் தனம் அதிகமாக இருக்கிறது. அந்த மூடநம்பிக்கை முட்டாள் தனம் தமிழ் ஈழத்திலும் பரவி கொண்டது மிகவும் வருத்த படவேண்டிய ஓன்று. ஆனால் எதையுமே வருத்த பட்டு எதுவும் ஆக போவதில்லை. ஈழ தமிழ் இளைஞர்கள் மூடநம்பிக்கையை போக்கும் முயற்சியில் ஈடுபடவேண்டும். இப்படி ஈடுபடுவது கூட ஒருவகையான விடுதலை போராட்டம் தான். இதே போன்ற போலிகள் உலகம் முழுவதும் அனைத்து மதங்களிலும் இருந்து கொண்டு சுயமாக மனிதனை சிந்திக்க விடாமல் முட்டாள் ஆக்கி கொண்டிருக்கிறார்கள் .

Anonymous said...

ஜேம்ஸ் வணக்கமுங்க

நீங்க இல்கிலீஸ்ல திட்டி ஆரம்பிச்சீங்க அதில எங்க நீங்க சொன்ன மனித அறம் இருக்கு.ஒரு பதிவைக்கூட சகிக்க முடியாத நீங்கலெல்லாம் மனித உரிமை பெண்விடுதலை பற்றியெல்லாம் பேசுறது. எனக்க சிரிப்புத்தான் வருது.

முதல்ல ஒன்றைத் தெரிஞ்சு கொள்ளுங்க உங்கட பயத்தையெல்லாம் எல்லோருக்கும் பொதுமைப்படுத்துக்கூடாது. எமக்கு தீவிரவாதிகளிடம் மட்டுமல்ல இந்துதுவாதிகளிடமும் அவர்களுக்கு முண்டு கொடுக்கிற ஏகாதிபத்திய அமெரிக்காவிடமும் கூட எங்கட ஒரு மசிருக்கும் பயமில்லை.

எங்களை பாகிஸ்த்தான் தீவிரவாதிகள் ஒண்டும் செய்யமாட்டினம். ஒரு புளொக் எழுதினதுக்காக அவர்கள் ஒருவரைத் தாக்குவார்கள் என்பது உங்கட முட்டாள்த்தனம். அவர்களுக்க வேறவேலை இருக்கம் நீங்க கொடிபிடிக்கிற இந்துத்துவாக்குத்தான் அந்த பழக்கமெல்லாம் இருக்கு. இன்னும் சொல்லப்போனால் குழந்தைகளையும் அப்பாவிகளையும் யுத்த தர்மங்களையெல்லாம் மீறி கொரூர செயல்புரியும் நீங்க ரேடர் மட்டுமல்ல எல்லா உதவியும் செய்யும் இலங்கை இராணுவம் சிலவேளை நீங்க சொன்னதைச் செய்யலாம். அது கூட இந்த பதிவு எழுதினதுக்காக இருக்காது.

பாகிஸ்த்தானிடம் மட்டுமா மனிததர்மம் இல்ல. இந்தியாவிடம் என்ன கொட்டிக்கிடக்கிறதா? முதல்ல உங்கட சூ....த கழுவுங்க பிறகு மற்றத பாக்கலாம்.

பாகிஸ்த்தானப்பற்றி எழுத நீங்க இருக்கீங்க தானே. உங்களைப்போல இன்னும் நிறையப்பேர் இருக்காங்க.


இதெல்லாத்தையும் விடுவம் இஸ்லாம் அடிப்படைவாதத்தை நாமும் ஏற்கவில்லை. இந்த பதிவில் எந்த இடத்திலும் அப்படிக் குறிப்பிடவில்லை. ஒரு உளவு அமைப்பை சாடையாகக் குறிப்பிட்டு தமது சந்தேகத்தை பதிவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கு நீங்க ஏன் இப்படி கொதிக்கிறீங்க. நாம் ஏதோ இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு ஆதரவு தருவது மாதிரி? அது சந்தேகத்தை இன்னும் வலுப்படுத்தகிறது.

நீங்கள் 'பாகிஸ்த்தானிலும் இவ்வாறான மத தீவிரவாத அமைப்புக்கள் இருக்கின்றன' என்று கூறி அவைபற்றிய கருத்துகளையும் தெளிவாக விளக்கியிருக்கலாம். நேர்மையான மனித விழுமியங்களை மதிக்கிற மனிதன் அதை செய்வான். ஆனால் உங்களிடம் "அவர்களைப் பற்றி ஒண்டும் எழுத மாட்டாய் எங்களை பற்றி ஏன் எழுதுகிறாய்" என்ற தொனிதான் இருக்கிறது. அவர்களும் அம்மா பகவானும் ஒன்றுதான் என்றுதானே இதற்கு அர்த்தம்.பெயர் மட்டும்தான் வேற. இவ்வளவு பெரிய உண்மையைச் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி நண்பா.


தோழமையுடன்
எஸ்.சத்யதேவன்

Anonymous said...

வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றிகள்

சதீசுகுமார், கறுப்பி, வெண்காட்டான்,வீரா, யோகன் பாரிஸ், செந்தழல் ரவி, பிரசாந், குரு, நிர்ஷன், தமிழ் பித்தன், சாந்தி, சுரவிசன், சுரேஸ்க்குமார், மு.மயூரண்ணா, சத்தியண்ணா, ஜமீஸஸ்


//இவை எப்ப திருகோணமலைக்கு வந்தவை...//
அவை வந்து 2 வருடம் என்று கேள்வி

//மடையர்களின் உலகம் இருக்கும்வரை யாருக்குத்தான் முன்னேற முடியாது???//
மடத்தனத்தை மாற்ற முயற்சி செய்வோமே

//இவாவிடம் பெண் பக்கதர்கள் தானாம் அதிகம்//
என்ன செய்ய ஏதோ ஒன்றையும் அல்லது ஒருவரையும் சார்ந்துதானே அவர்களின் வாழ்க்கை எம் சமூகத்தில் அதுதான் இலகுவாக ஏமாறுகிறார்கள்


//ஈழ தமிழ் இளைஞர்கள் மூடநம்பிக்கையை போக்கும் முயற்சியில் ஈடுபடவேண்டும். //
இதே உணர்வில்த்தான் நாமும் செயற்படுகிறோம். உங்கள் ஆதரவும் தேவை சதீஸ்

//தானே கடவுள் என்று கூறிக்கொள்ளும் இது போன்றவர்களை சமூக குற்றவாளிகயாக‌ மக்கள் ஒதுக்கி தள்ள வேண்டும்.//
எமது எண்ணமும் அதுவே

என் சார்பான கருத்தாடலுக்கு நன்றிகள் மு.மயூரண்ணா, சத்தியண்ணா

Anonymous said...

நண்பர்களே..!

'விபச்சாரம்' என்றால் என்ன?

'சிறுவர் கூட்டம்' இதை விளங்கப்படுத்துவது கடினம். ஆயினும், பல பெண்களுக்கு விடுதலை பெற்றுக்கொடுத்த- பெண்விடுதலை மற்றும் பாலியல் சுதந்திரம் பற்றி வகுப்பெடுக்கும் மயூரண்ணா இதை விளங்கப்படுத்த வேண்டும்.

அம்மா பகவானுக்கும் உங்களுக்கும் பெரிய வித்தியாசம் இருப்பது போல் எனக்குத் தெரியவில்லை. நீங்கள் எல்லோரும் சேர்ந்து 'சும்மா பகவான்' என்று ஒன்றை நடத்துவதற்கான அனைத்து தகுதியுடனுமிருக்கிறீர்கள். அரிய சந்தர்ப்பத்தைத் தவற விடாதீர்கள் நண்பர்களே..!

மீராவின் 'விலைமகள்' கவிதையை படியுங்கடா முதல்ல.
http://kallmag.blogspot.com/2008/12/blog-post.html

இப்படிக்கு,
-வேசைமகன்

மு. மயூரன் said...

ஆ.. வாருங்கள் அனானிமஸ் நண்பரே..!

எங்கே உங்களை நீண்ட நேரமாக காணவில்லையே என்று பார்த்துக்கொண்டிருந்தேன்.

புருஷோத்மன் வேறு நாலைந்து இடங்களில் என்பெயரைப் பயன்படுத்தியதைப் பார்த்த முதல் கணம் தொட்டே உங்கள் வரவை இங்கே எதிர்பார்த்துக் காத்துக்கிடந்தேன்.

"சிறுவர்கள்" பெரியவரான உங்களுக்கு தாங்கள் பயன்படுத்திய சொற்களுக்கான அர்த்தங்களை சிலவேளை ஆர்வமிருந்தல் விளங்கப்படுத்தக்கூடும்.

நீங்கள் எனக்கு வேசை மகன் என்றால் என்ன என்று விளங்கப்படுத்திய பிறகு நன் உங்களுக்கு விபசாரம் என்றால் என என்றும், பால்வினைத்தொழில் என்றால் என்ன என்றும் தனித்தனியாகவே சிலவேளை விளங்கப்படுத்த முடியும் ;-)

எனது சொந்தப்பெயரிலேயே..

Anonymous said...

விபசாரி என்ற பதம் இங்கு மயூரனால் பயன்படுத்தப்பட்டமை கவனிப்பிற்குரியதாய் எனக்குத் தெரிந்தது.

இங்கே பயன்படுத்தப்படும் விபசாரி என்ற பதம் சமூக வழக்கத்தில் பாலியல் தொழிலாளர்களைக் குறிக்கப் பயன்படும் அதே அர்த்தத்தில்தான் பயன்படுத்தினாரா என அறிய ஆவல். ஆம் எனில்.. ஒருவித இழிவு செய்ய ஏளனம் செய்யப் பயன்படும் என்னும் புரிதலில் அவ்வார்த்தையை அவர் பயன்படுத்திரா எனவும் அறிய ஆவல்.

அல்லது அரசியல் பாசிச கட்டுரைகளில் எல்லாம் இராயகரன் பயன்படுத்தும் பொறுக்கி நலமெடுத்த நாய் போன்ற சொற்களைப் போல விபசாரியென்பதுவும் வழக்கில் உள்ளதா..(அதாவது பாலியில் தொழில் என்ற அர்த்தம் சாராது.. )

என்னமோ அண்ணன் இராயகரனின் வழியில் பயணிக்கும் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.

தமிழன்-கறுப்பி... said...

இரண்டு வருசமோ எப்ப நான் திருகோணமலையை விட்டு கிளம்பினொ அப்பவே ஆரம்பிச்சுடுச்சு கெட்டகாலம் கோபிக்காதையுங்கோ அண்ணன்...

சும்மா பகிடிக்கு தான் சொன்னேன் :)

என்ன கொடுமை இது நாட்டுல...

Anonymous said...

I'm sick of this kinda reporting. Why you guys are so reluctant to be more investigative and factual? It's more like a gossip column featuring saucy saucy details of abuse. Grow up.

Anonymous said...

//அம்மா பகவானை நம்பலாமா நம்பக்ககூடாதா என்பதல்ல, ஒரு தனிமனிதன் பல்லாயிரக்கணக்கான மக்களை எப்படி ஏமாற்றுகிறான் என்பதுதான். பின் இந்த விடயத்தை மூளையில் புதைத்துவிட்டேன்.//
தந்திரதேவா குறித்த மிகவும் ஒஃபென்ஸிவ் பதிவிற்கான பின்னூட்டங்களில் நான் சொல்லிக் கொண்டிருந்ந்த அதே விடயத்தை, பல மாதங்கள் கழித்து மீளவும் இங்கே சொல்ல வேண்டி இருப்பதற்கு மிகவும் அசௌகரியமாய் இருக்கிறது. ஆனா என்ன செய்ய?
நீங்கள் மேலே குறிப்பிட்டிருக்கும் கேள்வியை மூளைக்குள் புதைக்காமல், எம்பையரிக்கலாகவும், சமூகவியல் ரீதியாகவும் கொஞ்சம் அலசியிருந்தால், உருப்படியானதொரு உரையாடல் நடந்திருக்கும், ஆனால் உங்கள் கவனமெல்லாம் விபசாரம், கல்லு வெட்டுதல் (தந்திரதேவா பதிவு) என்று saucyயான கொஸிப் எழுதுகிற, இராயகரன் தனமான எழுத்திலேயே தங்கி இருக்கிறது.
சோசியல் கொன்ஸ்ட்ரக்டிவிஸம் பயன்படுத்தி தந்ந்திரதேவாவையோ அல்லது அம்மா பகவானையோ கட்டுடைக்க முயற்சி செய்யலாம் என்று நினைக்கிறேன். நமது சமூகம் தந்திரதேவாக்களை மிகவும் வேண்டி நிற்கிறது, அவர்களுக்காக தவித்திருக்கிறது. இந்தக் `கேள்வி`(demand)க்கான சப்ளை-யே இந்த சாமி மார்கள் என்பதை உணர வேண்டியிருக்கிறது. apdi oru 'Collective Demand' எங்கட சமூகத்தில எந்ந்த எந்த காரணிகளால உருவாக்கப் படுது? ஆன்மீக வறுமை? களைப்பு? கூட்டு மன உளைச்சல்? மேலும் மேலும்.. well, i don't know the exact answers.

Anonymous said...

//இந்த விபசாரியை//
-மு.மயூரன்

மயூரன்????

மு. மயூரன் said...

Unbound Urchin,

//4. தன்னைப் பார்க்க பத்தாயிரம் ரூபா கேட்கும் விபசாரியை எல்லாம் குருவாய் நினைத்து வழிபடுமளவுக்கு மூடர்களாகவும் மந்தைகளாகவும் மக்களை வைத்திருக்கத்தான் நீங்கள் விரும்புகிறீர்கள்//

நீங்கள் சுட்டிக்காட்டிய "விபசாரி" விஷயம் குறித்து அந்தச்சொல்லின் அரசியல் குறித்து சிந்தித்தவாறேதான் இக்கட்டுரை பிரசுரிக்கப்படும்போது கூடவும் இருந்தேன், என் மறுமொழியையும் எழுதினேன்.

முன்னொருபோது, இவ்வாறான சொற்களுக்கு மாற்று அரசியற் சொற்கள் இருக்கும்போது விபசாரி, கற்பழிப்பு போன்ற சொற்களைப்பயன்படுதுவது தொடர்பாக இரயாகரனுடன் முரண்பட்டிருந்தேன்.

விபசாரி என்ற சொல் பால்வினைத்தொழிலாளியைக் கேவலப்படுத்தும்படி தற்காலத்தில் பயன்பாட்டிலிருக்கிறது என்பதால் தவிர்க்கப்பட வேண்டும் என்பதில் 100 வீத உடன்பாடும், பால்வினைத் தொழிற்றுறையைக் கேவலப்படுத்தும்படி இருக்கிறது என்பதால் தவிர்க்கவேண்டும் என்பதோடு நூறுக்கும் குறைவான வீத உடன்பாட்டோடும் அப்போது இருந்துள்ளேன்.

மறுமொழி எழுதப்பட்ட கணத்தில் - என்னால் தெளிவாக சொற்களால் விளங்கப்படுத்த முடியாதுள்ளது - ஒரு கூட்டம், ஒரு சொல்லைக் கேவலப்படுத்தி, அதன் மறுபக்கங்களை பார்க்க மறுத்து ஒழுக்கம் பேசும்போது, அந்தக்கூட்டத்தின் ஒழுங்கீனங்களை அதே சொல்ல்லை எதிர்த்திசையில் செலுத்துவன் மூலம் எதிர்கொள்வது என்ற உத்திக்காகத்தான் இதனை பயன்படுத்தினேன். இவ்வாறான எதிர்த்திசைப்பிரயோகம் இருப்பதாய்ப்பட்டதால்தான் இக்கட்டுரை இச்சொல்லைப் பயன்படுத்தும் இடங்களைக்கூட ஆழ்ந்த சிந்தனையோடு விமர்சிக்காமல் பார்த்துக்கொண்டிருந்தேன்.

ஆனால் இதை எழுதும் போது இச்சொற்பயன்பாடு குறித்து நான் கொண்டிருந்த மேற்கண்ட நிலைப்பட்டை தற்போது மாற்றிக்கொள்கிறேன். இச்சொல் எதற்காகப் பயன்பட்டபோதும், அது தனது அடிப்படையாக, பால்வினைத்தொழிலாளர்களை சமூகத்தில் கீழிறக்கும், எள்ளும், வன்முறைகொண்டு தாக்கும் இயல்பினைக் கொண்டிருக்கிறது. இச்சொல்லை பயன்படுத்துவதன்மூலம் நானும் அவ்வாறான செயல்களை மவுனமாக அங்கீகரிப்பதாகவே ஆகிறது. எனவே இச்சொல்லைப் பயன்படுத்தியது தவறு. இச்சொற்பயன்பாட்டுக்காக, நான் பால்வினைத்தொழிலாளர்களிடம் மன்னிப்புக்கோருகிறேன்.

இவ்விஷயத்தை இங்கே உரையாடுவதற்கான வெளியை உருவாக்கித்தந்த அதப்பின்னூட்டத்தை நான் அகற்றாமல் விடுகிறேன். இங்கே அதற்கான பதிலும் அளிக்கப்பட்டிருப்பதால் அகற்றவேண்டிய தேவை இல்லை என்றே கருதுகிறேன்.

சுட்டிக்காட்டியமைக்கும், எனது கருத்தொன்று மேலும் வளர்ந்து செல்ல ஒருவகையில் தூண்டியாய் இருந்தமைக்கும் தங்களுக்கு நன்றி.

Anonymous said...

இப்போது 'அம்மா பகவானுக்கும்' உங்களுக்கும் வித்தியாசம் வந்துவிட்டது.

இப்படிக்கு,
வேசைமகன் எனப்பட்ட புனிதமகன்

Vilvaraja Prashanthan said...

உங்கள் பதிவுகளுக்கும், பின்னூட்டங்களுக்கும் நன்றிகள். மனிதனாய் பிறந்தவனுக்கு சுயசிந்தனை, பகுத்தறிவு, சுயகட்டுப்பாடு இவை அனைத்தும் அவசியம். இல்லாவிடில் அவன் மனிதன் என்றூ கூறுவதற்கு எவ்வித தகுதியும் அற்றவன். மக்களே ஒரு நிமிடம்... ஒரே நிமிடம்.... சிந்தித்து பாருங்கள், ....
அம்மா பகவானை வணங்கும் பெருந்தன்மையான பக்தர்களே ! ஏன் நீங்கள் அம்மா பகவானை வணங்குகிறீர்கள் என்று கூறுங்கள்? அவர் கடவுள்தான் என்பதை உங்களால் நிருபிக்க முடியுமா????
நாங்கள் வணங்குகிறோம் உங்களுக்கு என்ன என்றூ கேட்காதீர்கள்... நாங்கள் அதை எதிர்க்கிறோம் உங்களுக்கு என்ன என்ற பதில் எம்மிடம் உள்ளது. எப்படி அம்மாஅம்மா பகவானை வணங்கும் உரிமை உங்களுக்கு உள்ளாதோ அதே போல் அதை எதிர்க்கும் உரிமையும் , அதை பற்றி ஆராயும் உரிமையும் எமக்கு உன்டு என்பதை தாழ்மையுடன் கூறுகிறேன்,
எமது பதிவாலரே ! இந்த பதிவில் பதியாப்பட்ட அம்மாபகவான் தம்பதிகளின் புகைப்படம் எமது கள் சஞ்சிகையின் தரத்தை குறைப்பதாகவே நான் கருதுகிறேன், அதை நீக்குவது நலம் என்றூம் கருதுகிறே. ஒரு ஆணும், பெண்ணும் ஒரு சொகுசு நாற்காளியில் அமர்ந்து கொண்டு தம்மை கடவுள் என்றூ கூறூவதும், தயிர் மற்றும் இனிப்புகளை உன்பதும் போன்ற கேளிக்கூத்தை விட வேறு எதுவும் கேளிக்கூத்து இவ்வுலகத்தில் இருக்காது. அவர்களின் இயல்பான புகைப்படத்தையே போடுங்க்ள் அது இப்படதை விட இன்னும் நகைச்சுவையாக இருக்கும்...

நன்றி....
வி.பிரஷாந்தன்

Anonymous said...

"மத நம்பிக்கையின் ஏமாற்றமும் மூடநம்பிக்கைகளின் சோகமும்" என்ற தலைப்பில் தமிழ் பூங்கா பதிவில் உள்ள பதிவை பார்க்கவும்.

http://tamilgarden.blogspot.com/2009/01/blog-post_07.html

Unknown said...

But the current problem is, there are no communities to protest against these type of activities. for example, this sick is spreading very quickly in colombo, but no one is here to talk about this. i wish to see a 'PERIYAAR' again.

M.ravi said...

un amma voda paduka evalavu.
nayea muthal la ne unda ammavuku pirantiya endu appatta keelu.
mutalla ne nalla va piraku matavangaluku sollu.
unala yan ithu mudiya illa.
poi unta ammava pakathu vidila irunthu kuititu va.

M.ravi said...

un amma voda paduka evalavu.
nayea muthal la ne unda ammavuku pirantiya endu appatta keelu.
mutalla ne nalla va piraku matavangaluku sollu.
unala yan ithu mudiya illa.
poi unta ammava pakathu vidila irunthu kuititu va.

Anonymous said...

tpgr;rhhp vd;why; ngz;..( Mz;fSf;F mg;gbahd nrhw;fs; r%f tof;fj;jpy; gad;gLj;jg;gLtjpy;iy vd;gJ xUGwkhf ,Ue;jhYk; Gjpjhf jkpo;nrhw;fis fz;Lgpbf;Fk; Ihk;gthd;fs; ,Jf;Fk; tpgr;rhud; vd;W fz;Lgpbj;jpUf;fyhNk?)
,y;yhtpbd; Mz;ghypay; njhopyhsHfs; ,Uf;fpwhHfs; vDk; tplak; njhpahky; ,Ue;jpUf;FNkh? 

Mf r%ftof;fj;jpy; ngz; ghypay; njhopyhsHfSf;F gad;gLj;jg;gLk;
Nrhy;iy Vd; gad;gLj;jpdPHfs;…

jd;id flTs; vd;W nrhy;Ygtd/fhl;bf;nfhs;Sgtd; vg;gb flTs; ,y;iyNah..
mg;gbNA jd;id ngz;zpay; thjp vd;W nrhy;ypf;nfhs;SgtDk;/fhl;bf;nfhs;SgtDk;.

ngz;

Senthu VJ said...

திருகோண‌மலையில் அடிக்கொரு கோவிலிருக்கும் போது கல்கி பக‌வானென்னெ எல்லோருமே வருவினம்..ஏனெண்டால் அவைக்குதெரியும் எங்க போன வியாபாரம் நடக்குமெண்டு..பேசாமல் மணியண்ணா சொன்னமாதிரி செந்தூவானநந்தா ஆகலாம் எண்டு யோசிக்கிறேன்...

vnishanthan said...

ஹாய் சும்மா பகவான்! பட்டு வேட்டி, பட்டு சாரி, விலை உயர்ந்த ஏதோ ஒரு மரத்தால் செய்யப்பட்ட கதிரை... ஹ்ம்ம்ம் ராஜபோக வாழ்க்கைடா உனக்கு... ஏமாளி மக்கள் இருக்கும்வரைக்கும் உன்ன யாரும் அசைசிக்க முடியாது... அசைசிக்க முடியாது... கலக்குடா மாப்புள..

Janany Prasanthan said...

hey,guys if u don't like this get away and mind your own business.Ithink you all who wrote about this don't have any work you all are jobless people..if so,go and clean your city.so,our country will improve otherwise you won't improve and you'll let our country down..idiot fellows..shame on you!

மு. மயூரன் said...

//u don't like this get away and mind your own business//

விருப்பம் இல்லாவிட்டால் விட்டுவிட்டுப்போவதற்கு நாங்கள் உங்களைப்போன்ற சமூக அக்கறை இல்லாத சுயநலவாதிகள் என்று நினைக்கிறீர்களா?

கண்ணுக்குமுன்னால் எமது ஒட்டுமொத்த சமூகமும் படிப்படியாக ஏமாற்றப்பட்டு மோசடி செய்யப்பட்டுக்கொண்டிருக்கும் போது எங்கள் வேலையைப் பார்த்துக்கொண்டு போகச்சொல்கிறீர்களா?

//go and clean your city.so,our country will improve//

அதைத்தான் நாம் செய்ய முயல்கிறோம். சுத்திகரிப்பு!

அம்மா பகவான் என்ற பெயரில் மக்களை ஏமாற்றி, மக்களின் நெருக்கடிகளையும் அவலத்தையும் நம்பிக்கைகளையும் சுரண்டிக் கொழுக்கும் திருட்டுக்கும்பலை அடியோடு சுத்திகரிக்கும் முயற்சியின் ஆரம்பப்படிகள் தான் இவை.


இங்கே வந்த பின்னூட்டங்களில் அம்மா பகவானுக்கு ஆதரவளித்து வந்த எதுவுமே எந்தவொரு உறுதியான எதிர்வாத்தையோ கருத்தையோ முன்வைக்கவில்லை. வசவுகளும் இயலாமையின் வெற்று வார்த்தைகளையும் தான் கொட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆகக்குறைந்தது இங்கே அம்மாபகவான் பற்றி எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கக்கூட யாருமில்லை.

கெட்ட வார்த்தைகளையும் வசவுகளையும் மட்டுமே கொட்டத்தெரிந்த ஆட்களின் நாயகராகத்தான் இந்த திருட்டுச்சோடி இருக்கிறது என்பதை நீங்களே நிரூபித்தவண்ணமிருக்கிறீர்கள்.
//.shame on you!//

Senthu VJ said...

Janani அவர்களுக்கு, நீங்கள் பெரிய வேலை செய்வதாக எங்களுக்கு சொல்லாமல் சொல்கிறீர்கள், உங்களின் பதிப்பு தெளிவுபடுத்துவது என்னவென்றால், நீங்களும் ஒரு பகவானின் மூடத்தனத்தின் மூலம் பலியானவ்ர் என்பதுதான். ஒருவேளை நீங்களும் அந்த 100 ரூபா கிடைக்கப்பெற்ற அதிஸ்டசாலியோ? மாலைவிற்று என்பதைப்பற்றி சொல்கிறேன் எல்லாம் அந்த "பகவானுக்குத்தான்" வெளிச்சம்...

Senthu VJ said...

இந்தப்பதிவைப்பாருங்கள்..

http://guruphiliac.blogspot.com/2005/11/kalki-bhagavans-money-lust.html

ARJUN JAFFNA KOKUVIL said...

AMMA PAKAVAN IS NOT A GOD ALL INDINS & SRILANKANS ARE REALLY LOOOOOSE ITS TRUE

shatheesan said...

கடவுள வணங்குறவனும் புத்திச்சாலி ,கடவுள வணங்காதவனும் புத்திசாலி ............BCZ கடவுள் இல்லையென்றும் நிரூபிக்க முடியாது,இருக்கென்றும் நிரூபிக்க முடியாது.ஆனால் கடவுள் இல்லை என்று, கடவுள வணங்குறவன் இடமும் , கடவுள் இருகுரேர் என்று கடவுள வணங்காதவன் இடமும் சொல்ரவன் தான் முட்டாள் .................. so dont waste ur tym guys..........& plz take this tym to improve u in other fields like arts,busines,politics & it..........tis chapter won't give any advantages or solutions.tis amma bahvan prayer is given a good meditation & peaceful heart to our people......-shatheesan

Unknown said...

dai pandingala nenga than pannadainga endral maththavangalaum ninachitingala? comments panna sekku madungaluku enda allntha anuthabangal, ellam kelvi pattatha thanda nenga kathaikiringa nijama enna endru parthuta kathaikiringa loosu poramboku, ivangala solringale nenga antha kalathula irunthu vanaguna unga murugan, pillayar elam enga ponanga, ungaluku oru visayatha eththuka mudiyalati atha kochcha paduthathinga vittudunga athula thalayittu enda mirugatha vida kevalamana pirapuku poringa unmayave nenga ellam kadanju edutha pannadainga than, conformed.