Monday, December 21, 2009

அம்மா பகவான் = சும்மா பகவான்


"வித்தியாமாலை" என்ற சொல்தான் எனக்கு அம்மா பகவனை அறிமுகப்படுத்தியது. இது நடந்தது சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பு. "வித்தியாமாலை" பற்றி கட்டாயம் சொல்லத்தான் வேண்டும் . "வித்தியாமாலை" கள்ளச் சாமியார்களின் தந்திரங்களில் உச்சக்கட்டம் என்று சொலும் அளவிற்கு பலரையும் தன்பால் ஈர்த்து இருந்தது. ஐந்து மணிநேரம் படித்தால் எவனும் பரீட்சையில் சித்தியடையலாம் என்பது எல்லாருக்கும் தெரியும். இதைத் தனக்குச் சார்பாகப் பயன்படுத்திக் கொண்டார் அம்மா பகவான். அதுதான் இந்த வித்தியாமாலை என்ற தந்திரம். இந்த மாலையை அணிந்து 21 நாள் அம்மா பகவனை நோக்கி விரதமிருந்தால் பரீட்சையில் சிறந்த பெறுபேறு கிடைக்குமாம். இதற்கு அவர்கள் ஒரு விதிமுறை விதித்திருந்தனர். ஒரு நாளைக்கு ஐந்து மணிநேரம் படிக்க வேண்டும் என்பதுதான் அது.

இதைப்பற்றி கேள்விப்பட்டு என் நண்பர்கள் பலரும் அதை நம்பி மாலை அணிந்து கொண்டனர். அவர்கள் என்னையும் அந்த முட்டாள்தனத்தை செய்யுமாறு அழைத்தனர். நான் இந்த முட்டாள்தனம் பற்றி என் நண்பர்களுக்கு விளக்கமுயன்று தோற்றுப்போனேன்.

என் நண்பர்களுக்கு இதைப்பற்றி விளக்க வேண்டுமானால் அம்மா பகவான் பற்றி நான் ஆராயவேண்டும் என்று எனக்கு தோன்றியது. ஆராயத்தொடங்கினேன் அப்போது எனக்கு முதலில் தெரிந்தது சத்திய லோகம்(ONENESS CENTER) எனும் அவர்களது வசிப்பிடத்தின் பெறுமதிதான்.


பார்க்கும் போதே என்ன ஒரு பிரம்மாண்டம். பார்ப்பதற்கு இன்னுமொரு வெள்ளை மாளிகை போல உள்ளது இது. இதன் பெறுமதி என தெரியுமா?
சும்மா இல்லை 400 மில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியில் கட்டப்பட்டதாம் இந்த ONENESS CENTER.
அப்போதுதான் யோசித்தேன்.
இந்த காசு எல்லாம் எப்படி அவர்களுக்கு வந்தது?

இதன் பிறகு ஒரு நாள் "கள்" என்ற வலைப்பூவில் உலாவிக் கொண்டிருந்தேன்.அப்போதுதான் நான் "அம்மா பகவான் விபச்சாரம்" என்ற கட்டுரையை வாசித்தேன். அதன் பின் எனக்கு இந்த விடயத்தில் ஆர்வம் அதிகமாகிவிட்டது. சில நாட்களின் பின் சத்தியன் அண்ணாவிடம் ஒரு கேள்வியை கேட்டேன். "ஏன் அதிகமான போலிச்சாமியார்கள் எல்லாம் இந்தியாவில உருவாகின்றார்கள்?". அவர் ஒரு சிறிய பதில் சொன்னார்." இந்தியாவில சாமியார்கள் சொத்துக் கணக்கு காட்டத்தேவையில்லை வருமான வரியும் கட்டத் தேவையில்லை" என்ற பதில் என்னை சிறிது அதிர்ச்சி அடையச் செய்தது. ஆனாலும் அதுதான் உண்மை என்பதை உணர்ந்துகொண்டேன்.

நன்கு படித்து நல்ல வேலையில் இருக்கும் வெளிநாடு வாழ் பக்திப்பழங்களின் காசுதான் அம்மா பகவானின் வங்கி வைப்பை இரட்டிப்பாக்கிக் கொண்டுள்ளது .ஏழைகளுக்கும் ஆதரவற்றோருக்கும் உதவவேண்டிய பணத்தை ஏமாற்றுப் பேர்வழிகளிடம் கொண்டுபோய் கொட்டுகிறார்கள். இவர்கள் தங்கள் முட்டாள்தனத்தை உணருவதுமில்லை மற்றவர்களை உணரவிடுவதுமில்லை.

அவர்கள் தமது அறிவின்மையால் அம்மா பகவானை நாடுகின்றார்கள் அங்கு பணத்தைக் கொட்டுகிறார்கள் ஆனால் பல இந்தியப் பணக்காரர்களும் சில அரசியல்வாதிகளும் தமது சொத்துகளைப் பதுக்கவும் அரசியல் ஆதாயங்களுக்காகவும் அம்மா பகவானை நாடுகின்றார்கள்.


இது பரவாயில்லை தங்களை ஒரு கண்காட்சியாக எண்ணிக்கொண்டார்கள் அவர்கள். தம்மைப் பார்க்கவும் பேசவும் மக்களிடம் பணம் வசூலித்துக் கொண்டிருக்கிறார்கள். அம்மா பகவானைப் பார்க்க ரூ.10000 பார்க்க ரூ.20000 என்று கட்டுரையில் வி.புருசோத்தமன் அன்று குறிப்பிட்டதை சில நாள்களுக்கு முன் நான் ஆதரப்பூர்வமாய் அறிந்தேன். திருகோணமலையை சேர்ந்த ஒரு யுவதி அம்மா பகவானைச் சந்திக்க சென்று வந்துள்ளார். சென்றுவந்த அவர் தமது உறவினர்களிடையே கூறியதாவது " அம்மா பகவானை பார்க்க 10000ரூபா காசு கட்டி போனன் ஒரு பிரியோசனமும் இல்ல, அவங்களப் பார்க்க நான் நிறைய நேரம் காத்திருந்தன் அவங்களும் வந்தாங்க ஆனா ஒரு நிமிஷம் கூட அவங்கள என்னால பார்க்க முடியல்ல" என்று அழுதபடி கூறியிருக்கிறார்.



ஆனா எவ்வளவுதான் பட்டாலும் புத்திவராத அவர் இறுதியாக பின்வருமாறு கூறியிருக்கிறார் "எனக்கு காசு போனது கூட கவலை இல்ல ஆனா அம்மா பகவானின் அருள் கிடைக்காதததுதான் எனக்கு கவலையா இருக்கு" இந்த இடத்திலதான் என் மனசில ஒரு கேள்வி தோன்றுகிறது. காசு கட்டித்தான் அருள் வாங்குவதனால் அம்மா பகவான் கடவுளின் அவதாரம் என்று சொல்லாம வியாபாரி படத்தில s.j.சூர்யா சொல்லுரத போல "100% Business Man" எண்டே சொல்லலாமே? அப்புறம் எதுக்கு இந்த அவதார வேடம். வழக்கமான இந்தியச் சீட்டுக் கம்பனி முதலாளிங்க போல ஒரு கம்பனி திறந்துட்டு இழுத்துமூடிட்டு போகலாமே.

ஐந்து ஆறு வருடத்துக்கு முன் இவர்களுக்கு ஒரு சைடு பிசினஸ் வேற இருந்தது. வேற என்ன எல்லா பணக்காரங்கள செய்றத போல சினிமா எடுக்கிறதுதான் அதுவும் பினாமி பேர்லதான். இப்படி இவங்க தயாரித்த படங்களில் ஒன்று முரளி சிம்ரன் நடித்த 'கனவே கலையாதே'.

சாமியார்கள் சினிமா எடுக்கிறதப் பற்றி என்னக்கு தனிப்பட்ட கருத்து எதுவும் கிடையாது, ஆனாலும் சமுதாய அழுக்குகளை சுத்தப்படுத்தி ஒரு பரிசுத்த உலகத்தை உருவாக்குவதே என் அவதார நோக்கம் என்று கூறும் இந்த கலியுக கல்கி அவதாரங்கள் சமூகத்துக்கு கருத்தைச் சொல்லும் படங்களை ஏன் எடுக்கவில்லை என்பது என் மனதில் ஒரு கேள்விக்குறியை ஏற்படுத்திஉள்ளது.

இது தொடர்பாக எனது நண்பனான ஒரு அம்மா பகவான் பக்தனிடம் உரையாடிக் கொண்டிருந்தபோது அவன் எனக்கு கூறிய பதில் என்மனதில் இன்னும் ஒரு கேள்வியை எழுப்பியது. அவன் பதிலானது " அடேய் லூசா அந்த படங்களை அம்மா பகவான் தயாரிக்கவில்லை, அந்த படங்களை தயாரித்தது அம்மா பகவானின் பக்தர் ஒருவர்தான் அந்த பக்தர் படங்களை தயாரிக்கும் முன் அம்மா பகவானிடம் அந்தப்படம் வர்த்தகரீதியில் வெற்றி பெற வேண்டுமென்று ஆசீர்வாதம் பெற்றுத்தான் படத்தை தயரித்தாராம், அம்மா பகவானும் அவருக்கு அருள் புரிந்தார் ".

ஆனால் நான் அறிந்தவரையில் அந்த திரைப்படம் வர்த்தகரீதியில் தயாரிப்பாளரை திருப்திப்படுத்தவில்லை என்பதுதான் உண்மை. இந்த இடத்தில்தான் எனக்குக் கேள்வி எழுந்தது, கடவுளின் (கள்ளக் கடவுள்)அருளுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்தப்படம் எதிர்பார்த்த வெற்றி அடையவில்லை என்றால் அவருக்குச் சக்தி எதுவும் இல்லையா? அப்படியானால் சக்தியில்லாதவர்களை ஏன் மக்கள் வணங்குகிறார்கள்? "சாணக்யா" படத்தில சரத்குமார் சொல்லுரதப்போல எல்லாம் "பப்ளிசிட்டி" தான்.

இதுக்கிடையில சில மதத்துக்கு முதல் அம்மா பகவான் ஒரு பெரிய கூத்தையே நடத்தயிருந்தாங்க. ஆனா பினிஷிங் டச்சிலத்தான் கோட்டவிடுட்டாங்க. அதுதான் கொழும்பு வாழ் பக்தர்களின் கனவில் வந்த அம்மா பகவானின் கதைதான், அகதி முகாம்களில் வாழும் வன்னி மக்களுக்கு உதவுங்க என்று பக்தர்கள் கனவில சொன்னாங்களாம் அம்மா பகவான். நல்ல விடயந்தான். ஆனா அது பேச்சோட சரி, நடந்ததா தெரியல்ல. கனவில வந்து சொன்ன அம்மா பகவான் ஏன் அவங்க சொன்னத செய்யாத பகதர்களுக்கு புத்தி புகட்டவில்லை. அப்படி என்றால் சாமி (கள்ளச் சாமி) வார்த்தைக்கு மரியாதையை இல்லையா? இப்படி இருக்கும் பொது அவங்கள எப்படி அவதாரமென்று சொல்லமுடியும்...........

தங்கள் பக்தர்கள் கனவில வந்ததுக்கு பதிலாக போர் நடவடிக்கைகளுக்கு முன் நின்றவர்களின் மனதை மாற்றி வன்னி மக்களுக்கு உதவியிருக்கலாமே? அது வேற எதுவும் இல்ல, இப்ப தமிழ்நாட்டிலயும் இலங்கையிலயும் அம்மா பகவானுக்கு மார்க்கெட் கொஞ்சம் கீழபோயிடிச்சு, மார்க்கெட்ட உயர்துரதுக்கு வர்த்தக நிறுவனங்கள் செய்யும் விளம்பரம் போலத்தான் இதுவும். அம்மா பகவானுக்கு நல்ல மனசு என்று சொல்லும் உங்கள் நண்பர்களை இயலுமானவரை விழிப்படையச் செய்யுங்கள்.

அம்மா பகவான் இப்போது நமது சமூகத்தில் வேர்விட்டுக்கொண்டிருக்கும் களைத்தான். ஆனால் அது ஒரு பூச்செடியின் தோற்றத்தில் உள்ளது. கண்ணுக்கு தெரியாத முட்களையும் அழகிய வாசனையான விஷப் பூக்களையும் கொண்டுள்ளது அதுதான் வித்தியாசம். வாசம் வருகிறதே என்று விஷத்தின் பக்கம் சென்றுவிடவேண்டாம். அழகிற்கும் அமைதிக்கும் பின்னால் எப்போதும் ஆபத்துதான் இருக்கும். வயலில் வளரும் களையை களை எடுப்பது விவசாயிகளில் கடமை என்பதுபோல சமூகத்தில் வளரும் களையை கிள்ளி எறிவது நமது கடமைதான்.

நண்பர்களே கடமையை செய்யுங்கள் பலனை எதிர்பாராதீர்கள்.நாளைய சந்ததி கள்ளச் சாமியார்கள் பிடியில் சிக்கக்கூடாது.

--
தி. அனோஜன்

66 comments:

அழகன் said...

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள். நாம் அனைவரும், தன்னம்பிக்கையுடன் உழைத்து முன்னேற நினைத்தால் மட்டுமே இப்படிப்பட்ட கயவர்கள் சமுதாயதிலிருந்து தொலைவார்கள்.

Adshayagi said...

enna solrathu ende puriyellai ..!1nampiratha ,,nampaviduratha endea theriyealai,111

இனியவன் said...

புதிதா ஒரு தகவலும் உண்டு... அவர் செய்மதி மூலமாக ஆசீர்வதிக்கிறாராம். இதை நான் ஒரு இலங்கை பத்திரிகையில் படித்தேன். என்ன ஒரு ஏமாற்றுவேலை. ஆன்மீகம் வேறு இது வேறு எமது மக்கள் புரிந்துகொள்வதில்லை. ஊடகங்கள் கூட இதற்கு உடந்தையாக இருப்பது கவலை..நாளில் ஒரு முறை அல்லது கிழமையில் ஒருமுறை சரி இல்லாவிட்டால் மாதம் ஒருமுறையாயினும் கடவுளை தியானிக்காதவர் இங்கு(கள்ளசாமியாரிடம்) தினமும், வாரந்தோறும் செல்வதும் தீட்சையென்று கேட்பதும் பெருங்கொடுமை....

தர்ஷன் said...

நம் மக்கள் சற்றே தம் துன்பங்களை பகிர யாரும் இருந்தால் நல்லது என இம்மாதிரியான நம்பிக்கைகளை ஏற்படுத்திக் கொள்கின்றனர். அவர்களின் இந்த நம்பிக்கையை பயன்படுத்தி பணம் பண்ணும் குறி சொல்லும் சின்னக் கள்ளச் சாமியிலிருந்து பெரிய லெவலில் உள்ள சாய் பாபா,சும்மா பகவான் வரையான அனைவரையும் என்ன செய்தால்தகும்.

தர்ஷன் said...

இன்னுமொரு சாமி பெயர் எல்லாம் ஞாபகம் வரவில்லை அவன் முகம் பௌர்ணமியன்று நிலவில் தெரியுமாம். போய நாட்களில் வீரகேசரியில் விளம்பரம் தருவான்.

Kalaiyarasan said...

மக்களை சிந்திக்கத் தூண்டும் வரிகள். எத்தனை பேர் திருந்துவார்கள்?

Vidhoosh said...

முன்னாள் கல்கிதான் இந்நாள் அம்மா பகவான்.

மூளையை கழற்றி வீட்டில் வைத்து விட்டு வருபவர்களை என்ன செய்வது.

--வித்யா

Unknown said...

பதிவுக்கு நன்றிகள்....

மக்களை கடவுள் என்ற போதைக்குள் தள்ளி அதற்குள் சைற் டிஸ்ஸாக புகுந்து கொண்டு மக்களின் வாழ்க்கைக்குள் விளையாடுகிறார்கள்....

இந்தப் போலிச்சாமியார்களின் பொது அம்சமாக கட்டாயம் பெண்கள் விடயத்தில் பிரச்சினையானவர்களாக இருப்பார்கள்....

மக்கள் தான் விழித்துக் கொள்ள வேண்டும்... அதற்கு இப்படியான கட்டுரைகள் நிச்சயமாக உதவும்....

ஆனால் எனக்குத் தெரிந்து பத்திரிகைகளில் இவர்களுக்கு எதிராக ஆக்கங்கள் வருவதில்லை, அவர்களும் இவர்களுக்கு ஒத்து ஓதுபவர்களாகவே இருக்கிறார்கள்....

பதிவுக்கு நன்றிகள், வாழ்த்துக்கள்...

Unknown said...

எந்த ஒரு விஷயத்தையும் ஆராயாமல் கதைக்க முன்வருவது முட்டாள்தனம்.

நீங்கள் எப்போது பார்த்தீர்கள் அம்மாபகவானின் பக்தர்கள் வவுனியா முகாம்களில் இருந்த மக்களுக்கு உதவி செய்யவில்லை என்று?

முதலில் எல்லா விஷயங்களைப் பற்றியும் தீர‌ விசாரித்துவிட்டு தாராளமாக‌ கதைக்கலாம். அதற்கு நீங்கள் குறிப்பிட்டுள்ள அந்த திரைப்படக் கதையையே சான்றாக எடுத்துக் கொள்ளலாம்.

ஆனால் ஒரு இறைசக்தியுடன் கூடிய ஒரு அவதார புருஷரை ஆதாரம் எதுவுமற்ற நிலையில், மனதிற்குத் தோன்றியபடி எல்லாம் நிந்திப்பது எவ்வளவு பெரிய பாவம் என்று உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.

ஆனால், இலங்கை வாழ் ஏகத்துவ நிலைய பக்தர்களால் நிதியுதவிகளும், அடிப்படை வசதிகளும், மற்றும் மாணவர்களுக்குத் தேவையான பாடசாலை உபகரண வசதிகளும் அன்றுமுதல் இன்றுவரை நேரடியாக வழங்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.

ஆனால், அவற்றையெல்லாம் விளம்பரப்படுத்திக் கொண்டிருப்பதற்கு அவர்களுக்கு விருப்பமில்லாமல் இருக்கலாம்.

ஏனெனில், கொடுத்ததை வெளி உலகிற்கு சொல்லிக் காட்டுவது அவ்வளவு பொருத்தமானதாக இருக்காது.

இவ்வாறு சமூக அக்கறை உண்மையாகவே உங்களுக்கு இருந்திருந்தால், நீங்கள் கட்டாயமாக அந்த மக்களுக்கு உதவி செய்திருக்க வேண்டும்.

ஆனால் செய்தீர்களா என்று உங்களுக்கு நீங்களே கேட்டுப் பாருங்கள். அப்போதுதான் எது சரி? எது தவறு என்பது புரிய வரும்.

ஆனால், எதையுமே முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல் அவசரப்பட்டு ஏதோ ஒன்றை சொல்லிவிட வேண்டும் என்பதற்காக என்னென்னவற்றையெல்லாமோ பேசிக் கொண்டிருக்கிறோம்.

இவ்வாறு எதையாவது சொல்லி மனதை மாற்றி விடுவோம் என்பதற்காகவே ஒருசிலர், தாம் பொதுவாக சமூக அக்கறை உள்ளவர்கள் போலக் காட்டிக் கொண்டுதான் இவ்வாறு எழுதுவதற்கு ஆரம்பிக்கிறார்கள்.

ஆனால் அவர்களில் எத்தனை பேர் சமூக நலனின் பொருட்டு மக்களுக்கு மக்கள், ஏழைகளுக்குப் பணக்காரர் என்று உதவி செய்திருக்கிறார்கள் என்பது இன்னமும் கேள்விக்குறி தான்...!

Unknown said...

பகவான் ஒருபோதும் தனக்கு விளம்பரம் தேடிக்கொண்டவரல்லர்...

அவரின் அமானுஷ்ய சக்தியை அனுபவித்து உணர்ந்த மக்களால் அவர் கடவுளின் அவதாரமாக ஏற்றுக்கொள்ளப் பட்டார் என்பதுதான் உண்மை!!!

தாம் அடைந்த அற்புத அனுபவங்கள் மூலமும், சாதாரண மக்களால் தீர்க்கப்பட முடியாத விஷயங்களை கணப்பொழுதில் நிறைவேற்றிவிடும் சிறீ அம்மா பகவானின் அனுக்ரஹத்தை அனுபவித்து பலனடைந்த மக்களால் அவர்களுக்கு கொடுக்கப் பட்ட பெயர் தான் "கல்கி"... See More

அவரை "கல்கி" அவதாரமாக பார்த்தால், அவர் கல்கியாகவே தெரிவார்... அல்லது வேறு ஒரு பாத்திரமாக நீங்கள் நினத்தீர்களானால், அவரும் அவ்வாறே தோன்றுவார்...

இவற்றை எல்லாம் வெறும் வார்த்தைகளால் வர்ணித்துவிட முடியாது... அனுபவங்கள் மூலமே கிடைக்கக்கூடிய மிகப்பெரிய பாக்கியம்...!!! அறியாமை என்னும் மாய எண்ணங்கள் சூழ்ந்திருக்கும்வரை அதனை அனுபவித்து ஆனந்திக்க முடியாது.

மேலும், கடவுள் என்பவர், எவ்வாறு இருக்க வேண்டும் என்று நாம் நினைக்கின்றோமோ, அவ்வாறே அவர் நமக்கு காட்சியளிப்பார்... உதாரணத்திற்கு நமது தாய் தந்தையராகவோ, நல்ல நண்பராகவோ அல்லது குருவாகவோ கூட இருக்கலாம்...

அது அம்மாபகவானாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை... வேறு யாராகவும் இருக்கலாம்... எந்த அவதார புருஷராகவும் இருக்கலாம்...

சிறீ பகவானின் கூற்றுப்படி, "உண்மை என்பது உனக்கு உன்னுடைய சொந்த அனுபவமாக கிடைக்கும் வரை அது பொய் தான்"

அது எவ்வளவு பெரிய உண்மை என்பதை நான் இப்போதுதான் இதன்மூலம் காண்கிறேன்... மிகவும் வருந்தக்கூடிய விஷயம் இந்த அறியாமை...

Unknown said...

உண்மையற்ற விஷயத்தை உண்மையென நம்புவதற்கு இவ்வுலகில் வாழும் மக்கள் ஒன்றும் அறிவிலிகள் இல்லையே....

அவ்வாறு வேண்டுமானால் ஒரு சில மக்களே இருப்பதற்கு சாத்தியம்...

ஆனால் சிறீ அம்மாபகவானின் ஆலயத்தில் அவ்வாறு ஒரு சில மக்கள் மட்டுமே இல்லையே...

ஏழை, பணக்காரன், பாமர மக்கள், படித்தவர் என்றில்லாமல் கோடிக்கணக்கான் மக்கள் அல்லவா வருகின்றார்கள்...

இங்கு நடைபெறும் நிகழ்வுகள் அனைத்துமே வெளிநாட்டு ஆராய்ச்சி வல்லுனர்களால் விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட்டவை... ...

கோடிக்கணக்கான உள்நாட்டவர்களும், வெளிநாட்டவர்களும் உலகின் மூலை முடுக்குகளில் இருந்தெல்லாம் வந்து குவிகின்றார்களே... ஏன்? என்ற எண்ணம் உங்களுக்குள் எழவில்லையா?

பொய் என்றால் இத்தனை மக்களும் ஏன் வருகிறார்கள் ? அவர்களின் நிலை மேம்படுவதற்கு பகவான் தான் காரணம் என்று அவர்களுக்கு ஏற்படும் தனிப்பட்ட தெய்வீக நிலைகள் மூலமாகத்தான் அதனை உணர்ந்து கொள்கிறார்கள்...

தவிர, யாரும் யாரையும் தூண்டி விடுவதில்லை நண்பரே...

அவர்களுக்குள் ஏற்படும் மாற்றம், அவர்களைச் சுற்றியுள்ளவர்களையும், அவர்களைச் சார்ந்தவர்களையும் தாமாகவே மாற்றி விடுகின்றது...

அவர்கள் அடைந்த அந்த பக்தி பரவசத்தால் அது நன்றியுணர்வாக மாறும்போது, அதனை மற்றவர்களுக்கும் கூறி, அந்த போரின்ப நிலையை தம்மைச் சார்ந்தவர்களுக்கும் கிடைக்கச் செய்கின்றார்கள் என்பது தான் உண்மை...

மேலும் உங்களுக்கு ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் இந்த இணையத்தளத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்...

www.onenessindia.org

மு. மயூரன் said...

கருத்துக்களுக்கு நன்றி செந்தூரன்.

நன்றி சொல்வதற்குக் காரணம், இதுவரைக்கும் அம்மாபகவானை விமர்சித்து எழுதினால் எந்த அம்மாபகவான் பக்தரும் விவாதிக்க வருவதில்லை.

விவாதம் என்றாலே ஒன்றில் பயந்து ஓடுகிறார்கள் அல்லது நாயே, மடையா.. போய் உன்ட அம்மாவோட படு என்று பெயரில்லாமல் பின்னூட்டமிட்டுவிட்டு ஓடி ஒளிந்துகொள்கிறார்கள்.

நீங்கள்தான் நானறிய அம்மாபகவான் சார்பாக ஒரு விவாதத்துக்கு வருகிறீர்கள்.

Anonymous said...

அம்மா பகவானை நேரில் சந்திக்க காசு வாங்குகின்றார்களே இது எந்த வகையில் நியாயம் செந்தூரன்? அத்துடன் அம்மா பகவான் குடும்பத்தில் சொத்துப் பிரச்சனை செய்தி அறிந்திருக்கவில்லையா? மனிதர்களை அதிலும் குடும்பம் குட்டி காம வெறிபிடித்த மனிதர்களை கடவுளாக மதிப்பவன் முட்டாள்.

Unknown said...

முதலில் ஒன்றைத் தெளிவாக புரிந்து கொள்ளுங்கள், இங்கு நடைபெறும் நிகழ்வுகள் அனைத்துமே ஒரு தெய்வீக கோட்பாட்டை மட்டுமே அடிப்படையாக் வைத்து நடந்து கொண்டிருக்கின்றன.. ...

இறைவனுக்கும் எங்களுக்குமான தொடர்பை ஏற்படுத்திக் கொடுப்பதே சிறீ அம்மா பகவானின் வேலை.

ஆதிகாலத்தில் வாழ்ந்த மனிதனுக்கும் இறைவனுக்கும் நேரடி தொடர்புகள் இருந்து வந்தன என்று புராணங்களும் இதிகாசங்களும் குறிப்பிடுகின்றன.

ஆனால் இப்போது உள்ள மனிதர்களுக்கு அது நடைபெறுகின்றதா என்று பார்த்தால் இல்லவே இல்லை...

ஏன்? நமது சைதன்ய நிலை மிக மிக குறைவாக உள்ளது.. அதாவது நமது உணர்வு நிலை... இதனாலே தான் அனேகமான பிரச்சனைகள் தோன்றுகின்றது..

நீ பெரியவனா? நான் பெரியவனா? என்ற கேள்வி எழுந்ததும் அங்கே ஆணவம் தலை தூக்க ஆரம்பிக்கின்றது. இதனால் பிரச்சனைகள் அதிகரிக்கின்றனவே தவிர தீர்வதில்லை.

உதாரணத்திற்கு நீங்கள் குறிப்பிட்டீர்களே, அந்த அகதி முகாம்களில் உள்ள மக்கள் ... அவர்களுக்கு அந்த நிலை ஏன் ஏற்பட்டது? எப்படி ஏற்பட்டது என்று சிந்தித்துப் பார்க்கத் தவறி விட்டீர்களே...

ஏன்? ஐக்கியம் இல்லை... மனிதர்களுக்கு மனிதர் ஒற்றுமை இல்லை. நீ பெரியவனா? நான் பெரியவனா என்ற மனோபாவத்தினால் அது சிறிய வட்டத்திற்குள் ஆரம்பித்து பெரிய அளவாக மாறுகின்றது...

இப்படி எல்லா பிழைகளையும் நாமே செய்துவிட்டு, அநியாயமாக கடவுளின் மீதே வீண்பழி சுமத்துகின்றோமே... இது எந்த வகையில் நியாயம்...?

எனது வழியில் பார்க்கப் போனால், நாம் கடவுள் கேட்டுக்கொண்டவாறு நடக்கவில்லை. அல்லது அவர்கள் நம்மை ஆட்கொள்வதற்கு வழி ஏற்படுத்திக் கொடுக்கவில்லை என்றே தெரிகிறது.

இவ்வாறு நாம் நடந்துகொள்ளும் போது கடவுளால் கூட நம்மைக் காப்பாற்ற முடியாதுள்ளது.

உண்மையில் அம்மா பகவானின் தீட்சையில் என்ன நடைபெறுகிறது என்று பார்த்தால், அதன் மூலமாக‌ நமது பிரார்த்தனைகளை நிறைவேற்றி வைக்கிறார்கள்

மேலும் விளக்கமாகப் பார்த்தோமென்றால், அதிலிருந்து வெளிப்படும் தெய்வீக சக்தி அலைகள் நமது உடலிற்குள் சென்று, நமது பிரார்த்தனை நிறைவேறுவதற்கு தடையாக உள்ள காரணிகளைக் களைந்து, நமது பிரார்த்தனைகளை நிறைவேற்றுகின்றது எனக் கொள்ளலாம்.

அது மனிதருக்கு மனிதர் வேறுபடலாம்... ஒருவருக்கு அது அமைதியாகவோ, அன்பாகவோ, தெய்வீக அனுபவங்களாகவோ, உணர்வாகவோ கூட வெளிப்படலாம்.

அது இறந்த காலத்தைப்பற்றியோ, அல்லது நிகழ்காலத்தைப் பற்றியோ, எதிர்காலத்தில் நடைபெறப்போகும் நிகழ்வுகளாகவோகூட இருக்கலாம்.

இவையனைத்தும் அம்மாபகவானிடம் உள்ள பந்தத்தின் அடிப்படையிலும், பிரார்த்தனையின் அடிப்படையிலும் மக்களுக்கு மக்கள் வேறுபடும்.

தவிர, நமக்குள் ஒரு மாற்றம் ஏற்படாமல், ஒரு பந்தம் ஏற்படாமல், ஒரு பிரார்த்தனை ஏற்படாமல் இவையனைத்தும் நடைபெறலாம் எனக் கூற முடியாது...

Unknown said...

இந்த கலியுகத்திலே மனிதர்கள் பாவங்கள் பல செய்து கொண்டிருக்கிறார்கள்.

எமது உறவுகளுடனான உறவு முறைகள் திருப்திகரமாக இல்லை.
சொல்லாலும் செயலாலும் மற்றவர்களை காயப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்...

உதாரணத்திற்கு எங்களைப் போன்ற மனிதர்களைக் குறிப்பிடலாம்... :)

இதனால் நமது இதயத்தில் ஏற்படும் ஒவ்வொரு வலி மிகுந்த அனுபவங்களும் எமது மூளையில் ஒரு கரும்புள்ளி சக்தியை உருவாக்கி விடுகின்றன.

இது இவ்வாறு தொடர்ந்து கொண்டிருக்கும் பட்சத்தில் இறைவனுக்கும் எங்களுக்குமான தொடர்பு அற்றுப் போகிறது. அதாவது தொடர்பறுந்த நிலை

இறைவனிடமிருந்து வரும் பதில்களையும் பெற்றுக்கொள்ள முடிவதில்லை... அதேபோல எமது கோரிக்கைகளும் இறைவனை சென்றடைவதில்லை.

அதாவது நமக்கு இறைவனுடன் நேரடியாக தொடர்பு கொண்டு நமது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள முடியாதுள்ளது. ...

இது இங்கு குறிப்பிடப்பட்ட ஒரு விஷயம் மட்டுமே!

இவ்வாறு கண்ணுக்குப் புலப்படாத எத்தனையோ காரணிகள் நம்மைச் சூழ்ந்துள்ளது தெரியாமல் வீணே காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் இந்தக் குறைகள் அனைத்தையுமே இன்று அம்மாபகவான் தீர்த்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதனை நாம் நன்றாக விளங்கிக்கொள்ள வேண்டும்.

இங்கு வரும் அனைவருக்கும் அவர்களுக்குள் மறைந்திருக்கும் குறைகள் களையப்பட்டு, அனுபவமாக வழங்கப்பட்டு அவற்றிலிருந்து விடுதலை அளிக்கிறார்கள் சிறீ அம்மாவும் பகவானும்...!

Unknown said...

அம்மாபகவானின் ஆலயத்திற்கு தினமும் கோடிக்கணக்கான மக்கள் வந்து போகின்றார்கள்.

இது ஏனெனில் அவர்களின் வாழ்க்கையில் நடைபெறும் மாற்றங்களும் அனுபவங்களாலும் மட்டுமே இது சாத்தியமாகின்றது... ...

இவ்வாறு வரும் பக்தர்களுக்காக கட்டப்பட்டதுதான், அந்த பிரமாண்டமான ஏகத்துவத் திருக்கோவில்.

அது இன்றுடன் முடிவடைந்துவிடப் போகும் ஒரு இடம் அல்ல...

அதனைப் போற்றிப் பராமரிக்க வேண்டிய மகத்தான பொறுப்பு அவர்களது பக்தர்களுக்கு உண்டு.

ஆனால் இவற்றையெல்லாம் நிர்வகிப்பதற்கு அவர்களிடம் பணம் இல்லாது இருக்கலாம்.

ஏனெனில் அங்கு வந்து தங்கி இருப்பவர்களுக்கு தேவையான இருப்பிட வசதி, உணவு மற்றும் இதர தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு பல லட்சக்கணக்கில் பணம் தேவைப்படுகின்றது.

எனவே அவர்களது நலனைக் கருத்திற்கொண்டுதான் இந்த நிதியைத் திரட்டி அதனை திரும்பவும் மக்களுக்கே பயன்படுத்துகிறார்கள்.

தவிர இங்கு கொடுக்கப்படும் அத்தனை காணிக்கைகளும் அவர்களுக்கு உடனேயே பன்மடங்காகத் திரும்ப வரும் என்பது, சிறீ அம்மா பகவானை உணர்ந்து அனுபவிக்கும் மக்களுக்கு மட்டுமே கிடைத்திருக்கும் அனுபவங்கள் மூலம் நன்றாக அறிந்து கொள்ளலாம்...

ஏன் உங்களுக்கு இன்னமும் சந்தேகம் இருந்தால் தாராளமாக முயன்று பார்க்கலாம்...!

Unknown said...

கவனிக்கவும்! இவ்வாறு தவறாகப் புரிந்துகொண்டு விளக்கம் கூறக்கூடியவர்கள் விரல்விட்டு எண்ணக்கூடியவர்களே உள்ளனர்.

அதனால் மிக மிக வேகமாக வளர்ந்துவிட்ட நிலையிலிருக்கும் ஏகத்துவ தர்மத்தினை யாராலும் அழிக்கமுடியாது என்றே நான் நினைக்கின்றேன். ...

நாம் அடைந்த பலனை அனைத்து மக்களும் அனுபவித்து பலனடைய வேண்டும் என்பதே எங்கள் அனைவரதும் விருப்பம்.

இராமர், கிருஷ்ணர், யேசு, முகம்மது நபி போன்றோர் அவதாரம் எடுத்தபோதெல்லாம் அவர்களை நம்பாது பைத்தியக்காரன், பித்தலாட்டக்காரன் ஏமாற்றுக்காரன் என்று துன்புறுத்தியோர்கள் ஏராளம் ஏராளம்...

ஆனால் அவர்களை உணர்ந்து வழிபடக்கூடிய நிலை சில புண்ணியாத்மாக்களுக்கு மட்டுமே கிடைத்தது.

இன்று அந்தக் கடவுளர்களெல்லாம் வரலாற்றிலே காவியமாகி இருக்கின்றார்கள்...!

இன்று எம்மில் எத்தனைபேர் ஆசைப்பட்டிருக்கிறோம், "நாம் எல்லாம் அவர்கள் வாழ்ந்த காலத்தில் வாழவில்லையே... அவர்களைப் பார்க்கும் பாக்கியம் கிடைக்கவில்லையே" என்று...

அதேபோல தான் இன்றும் தொடர்ந்துகொண்டு இருக்கிறது நம் சமுதாயம்...

"மீண்டும் ஒரு அரிய சந்தர்ப்பத்தினைத் தவற விட்டுவிட்டோமெ" என்று எண்ணி எதிர்காலத்தில் வருந்திவிடக் கூடாது என்று நினைத்தே புரிய வைக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்.

இவ்வாறு தவறாக நினைத்து, கிடைத்தற்கரிய சந்தர்ப்பத்தினை வீணாக தவறவிடுபவர்களை எண்ணி கவலையடைகிறேன்.

மு. மயூரன் said...

செந்தூரன்,

சத்தியசாயி பாபா பற்றி உங்கள் கருத்து என்ன?

Unknown said...

நான் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல யாரும் பணத்தையோ பதவியையோ குறியாக வைத்துக் கொண்டு வாழவில்லை ...

ஆனால் மனிதன் மனிதனாக வாழ வேண்டும்! அதுவே மிக முக்கியம். ஆனால் சற்றுச் சிந்தித்துப் பாருங்கள், இன்றைய மனிதன் வாழ்க்கையை அனுபவித்து நிம்மதியாக வாழ்கின்றானா என்று???...

உண்மையிலேயே நீங்கள் சமுதாயத்தின் மீது அக்கறை இருந்தால் கட்டாயமாக உதவி செய்திருப்பீர்கள்...

அன்றும், இன்றும், என்றும் அம்மாபகவானின் பக்தர்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்... ஆனால் அது இலைமறை காயாகக் கூட இருந்துவிடலாம்.

ஆனால் அது முக்கியமல்ல. என்ன செய்தோம்... எப்படிச் செய்தோம் என்பதுதான் முக்கியம் நண்பரே...

Unknown said...

@ மு.மயூரன்:

மிக்க மகிழ்ச்சி நண்பரே... :)

உங்களுக்கான பதில்!

நாங்கள் இவ்வளவு காலமும் இப்படியெல்லாம் கூட பகவத் தர்மத்திற்கு எதிராக கருத்துக்கள் புனையப்படும் என்று சற்றும் எதிர்பார்க்காததாலும், கவனிக்காமல் விட்டதாலும் தான் இந்த கட்டுரைகள் மற்றவர்களின் கண்களுக்குப் படாமல் போயிருக்கிறது என்று நினைக்கிறேன்.

எதேச்சையாக எனது நண்பர் ஒருவரின் வலைப்பக்கத்தில் இந்த செய்தி தட்டுப்பட்டது. எனவே முதன்முறையாக இப்போதுதான் பார்க்கிறேன்...

மேலும் எனக்கு சாய்பாபாவைப் பற்றியோ அல்லது மற்றவர்களைப் பற்றியோ சரியாகத் தெரியவில்லை.

ஆனால் அம்மாபகவானைப் பற்றி மட்டும் தெரியும்.

எனவே தாங்கள் அதனை சாய்பாபாவின் பக்தர்களிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

ஆனால் நம்மால் முடியாத ஏதோ ஒரு சக்தி அவர்களிடம் இருப்பதாலேயே அவர்கள் அவதாரங்களாக வர்ணிக்கப் படுகின்றார்கள் என்பதை மட்டும் என்னால் விள‌ங்கிக் கொள்ளக் கூடியதாக உள்ளது நண்பரே.

மு. மயூரன் said...

அப்படியானால், பிரேமானந்தாவையும் நீண்டகாலம் மக்கள் அவதாரமாக வழிபட்டும் ஏற்றும் வந்தார்களே? அவர் உண்மையிலேயே நீங்கள் குறிப்பிடும்படியான் சக்தியை கொண்டிருந்ததாலா? அவரும் அம்மாபகவான் போன்ற அவதாரம் என்றதாலா?

சங்கராச்சாரியையும் பிரமாநன்தாவையும், கொலைவரை போய்விட்டதால் பொலிஸ் பிடிக்க வேண்டியதானது. பொலிஸ் இந்த அவதார புருஷர்களைப் பிடித்து உள்ளே போடும்வரை மக்கள் அவதாரங்களாக நம்பிக்கொண்டிருந்தார்களே?

கொஞ்சநஞ்ச மக்களா பிரேமனந்தாவுக்குப்பின்னால் இருந்தார்கள்?

சாதாரண ஆசிரமமாகவா பிரேமனந்தா ஆசிரமம் இருந்தது?

Unknown said...

மயூரன்! அதுதான் நான் ஏற்கனவே குறிப்பிட்டாகி விட்டதே...

நான் அம்மாபகவானின் சக்திகளை மட்டுமே நம்புகின்றேன்! அவர்களிடம் உள்ள அபரிமிதமான சக்தியும் கருணையும் என்ன என்பதை அவர்களின் நேரடி தரிசனத்தில் பங்குபற்றியவர்களுக்கு அது மிக மிக நன்றாக விள‌ங்கியிருக்கும்.

உலகிலே பல்வேறுவிதமான மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் எல்லோரும் ஒரே தன்மையை ஒத்தவர்களாக இருக்கிறார்களா? இல்லை!

ஏன் ஒரு உதாரணத்திற்கு உங்களையே எடுத்துக் கொள்ளுங்களேன்... உங்கள் குடும்பத்திலே எல்லோரும் ஒரே மாதிரியானவர்களாக இருக்கிறார்களா?

இல்லை... உருவத்திலே வித்தியாசப்படலாம், அல்லது குணத்திலே அல்லது பழக்கவழக்கத்திலே என்று எத்தனையோ விஷயங்களைக் கூறிக்கொண்டே போகலாம்.

இது எனக்கு, உங்களுக்கு மற்றவர்களுக்கு என்று பாகுபாடில்லை. இந்த உலக ஜீவராசிகள் அனைத்திற்குமே இதுதான் நியதி.

எனவே கடவுளின் அனுக்ரஹத்தைப் பெற்றவராக பிரேமானந்தா சுவாமிகள் இருந்திருக்கலாம்.

ஆனால் அவரது பூர்வ ஜென்ம கர்மாக்கள் மற்றும் அதனைப் போன்ற காரணிகள் அவரில் மாற்றத்தை உண்டு பண்ணியிருக்கலாம்.

உதாரணத்திற்கு இராவணனை எடுத்துக் கொள்ளுங்கள்...
அவர் சிவ பக்தியிலே சிறந்தவர் என்று முழு உலகமுமே அறிந்த விஷயம். ஆனால் அவர் தனது சில ஆசைகளின் காரணமாக இன்றுவரை விரும்பத்தகாதவராகவே கருதப்படுகிறார்.

ஆனால் அவரது தம்பி விபீஷணனை பார்த்தீர்களா? அவரும் அரக்க குலத்தில் தான் பிறந்தார்... அதே இராவணனுக்குத்தான் தம்பியாக இருந்தார். ஆனால் அவர் கடைசி வரையும் நேர்மையாக வாழவில்லையா?

அதே போல தான் இதுவும் என்று எடுத்துக் கொள்ளுங்களேன்...

ஏன் பிழையானவர்களை மட்டுமே பார்க்கிறீர்கள்? முகம்மது நபி, இராமர், கிருஷ்ணர், இராமகிருஷ்ண பரம‌ஹம்சர் என்று பல பேர் இருக்கிறார்களே... அவர்கள் சென்ற வழிகளை மட்டும் ஏன் நினத்துப் பார்க்க மறுக்கிறீர்கள்?

ஆக, ஓரிருவர் செய்யும் குற்றத்தை மட்டும் வைத்துக் கொண்டு, ஒட்டுமொத்த அவதார புருஷர்களையும் எடை போடுவது தவறு!

Unknown said...

செந்தூரன் என்ற சகோதரரிடம் சில கேள்விகள்...
(மு.மயூரன் அண்ணா சொன்னதைப்போல இவருக்கு நன்றி சொல்லத் தான் வேண்டும்.)

1. இவர் கடவுள் அல்லது நீங்கள் சொல்வதுபோல அதிசய சக்தி கொண்டவர் என்றால் இவரைப் பார்ப்பதற்கு ஏன் பணம்? கடவுளுக்கு ஏன் பணம்? அதுவும் சாதாரண மக்கள் செலுத்தமுடியாதளவு பணம்?
இவர் கடவுள், மக்களை ஆசீர்வாதிக்க விரும்புகிறார் என்றால் அதை இலவசமாகவே செய்திருக்கலாமே?

(அதை மக்களுக்காக பயன்படுத்துகிறார்கள் என்ற கருத்து ஏற்றுக் கொள்ள முடியாதது சகோதரா. அண்மையில் திரு.விஜயகுமாருக்கும் அவரது மகனுக்குமிடையில் பிரச்சினை ஏற்பட்டு மகன் தனியாகப் பிரிய முடிவு எழுத்திருப்பது உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் எங்களுக்குத் தெரியும். இந்தப் பிரிவுக்குக் காரணம் பணம் சம்பந்தமான பிரச்சினை என்கிறார்களே? )


2. இவர் கடவுள் என்றால் இந்திய பொழுதுபோக்குச் சஞ்சிகைகளில் விளம்பரங்களை எல்லாம் வழங்க என்ன காரணம்?
கடவுள், சக்தி உள்ளவர் என்றால் விளம்பரங்கள் எதுவும் இன்றி அவருடைய சக்தி மூலம் இவருடைய கெர்ளகைகளையும், பெருமையையுமம் மந்திரம் ஏதும் போட்டுப் பரப்பலாமே?


3. இவர் சத்யசாயி பாபா போல லிங்கம் ஏதும் எடுக்காமைக்குக் காரணம் என்ன?
சாயி பாபா பிடிபட்டுவிட்டார் என்பதற்காகவா?
இல்லை, கடவுள் என்றால் வாயிலிருந்து லிங்கமென்ன அதைவிடப் பெயரியவற்றையுமல்லவா எடுக்க வேண்டும்?


4. யுத்தம் முடிந்த பின்னர் அந்த மக்களுக்கு உதவுமாறு சொன்ன பகவானால் யுத்தத்தை தனது சக்தியினால் நிறுத்த முடியாமல் போனதுக்கு என்ன காரணம்?
அரசியலில் சம்பந்தப்படமாட்டார் என்று தப்பிக் கொள்ளாதீர்கள். இது மக்கள், அவர்களின் உயிர்கள், உடமைகள் தொடர்பான விடயம்...


5. வித்யாமாலைய போடாமல் ஒருவர் 5 மணிநேரம் படித்தால் ஒரு மாணவனுக்கு சித்தி கிடைக்காது என்கிறீர்களா?


6. LIC இல் agent ஆக வேலை செய்தபோது இவர் பணமோசடி செய்து வேலையை விட்டுத் தூக்கப்பட்டதும், பின்னர் முன்னையதாக ஆச்சிரமொன்றை நடத்திக் கொண்டிருந்தபோது பெண்கள் துஷ்பிரயோகத்திற்காக கைதுசெய்யப்படவிருந்தார் என்ற விடயம் தெரியுமா உங்களுக்கு?


7. சக்தி இருப்பதால் தான் மக்கள் செல்கிறார்கள் என்றால் சத்யசாயி பாபா, பிரேமானந்தா, சங்கராச்சாரியார் போன்றவர்களுக்கும் கூட்டம் இருந்ததே?
அப்படியானால் அங்கே சென்ற மக்களுக்கும் மூளை இருந்தது என்கிறீர்களா?
அதனால் அம்மா பகவானிடம் செல்பவர்களுக்கும் மூளை இருக்கிறது என்கிறீர்களா?


8. மக்களுக்காக சேவை செய்ய பணம் வசூலிக்கப்படுகிறது என்கிறீர்களே, அப்படியானால் தங்கள் முழு வருமானத்தையும் அவர்களால் பகிரங்கப்படுத்த முடியுமா? அப்படி செய்யின் அவர்களின் வருமானத்தில் ஒரு சொற்ப வீதத்தையே அவர்கள் மக்களுக்காக செலவழிக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்வீர்கள்.

அதீதன் said...

@ செந்தூரன் "இறைவனுக்கும் எங்களுக்குமான தொடர்பை ஏற்படுத்திக் கொடுப்பதே சிறீ அம்மா பகவானின் வேலை."


உங்களின் இந்த கருத்துப்படி அம்மா பகவானை நீங்கள் ஒரு இறை பாலமாகவே குறிப்பிடுகிறீர்கள் அது உங்கள் கண்ணோட்டம் இருப்பினும் அவர்கள் பற்றி வெளிவந்த இசை இறுவெட்டுக்களில் அவர்களை இறைவனாகவும் கல்கி அவதாரமாகவும் பாடல் வரிகள் அமைந்ததற்கு அவர்கள் காரணம் இல்லை என்று நீங்கள் நினைக்கிறீர்களா அல்லது அவை அவர்களுக்கு தெரியாமல் நடந்தது என்று நினைக்கிறீர்களா

saran said...

உண்மைதான் செந்தூரன்.....மற்றவர்களை விமர்சித்தே பழகிய மூடர்களுக்கு கனி கூட கல்லாகத்தான் விளங்கும்.........விடுங்கள்......காலம் நம் பகவானின் சக்தியை கருணையை அன்பை விளக்கும்..........அம்மா பகவன்சரணம்...

saran said...

உண்மைதான் செந்தூரன்.....மற்றவர்களை விமர்சித்தே பழகிய மூடர்களுக்கு கனி கூட கல்லாகத்தான் விளங்கும்.........விடுங்கள்......காலம் நம் பகவானின் சக்தியை கருணையை அன்பை விளக்கும்..........அம்மா பகவன்சரணம்...

Anonymous said...

உண்மைதான் செந்தூரன்.....மற்றவர்களை விமர்சித்தே பழகிய மூடர்களுக்கு கனி கூட கல்லாகத்தான் விளங்கும்.........விடுங்கள்......காலம் நம் பகவானின் சக்தியை கருணையை அன்பை விளக்கும்..........அம்மா பகவன்சரணம்...

அஜந்தன் said...

நல்லது செந்தூரன், உங்களின் ஆன்மீக அறிவை எண்ணி மெச்சுகிறேன். ஆனால் இவ்வளவு ஆராய்ச்சி திறன் உள்ள நீங்கள் ஏன் கண்மூடித்தனமாக இந்த அம்மா பகவனை நம்புகிறீர்கள் என்று தான் எனக்கு விளங்கவில்லை. நீங்கள் ஒன்றை புரிந்தது கொள்ள வேண்டும், இங்கு விமர்சனம் செய்பவர்களோ அல்லது எழுதுபவர்களோ நாத்திகர்களோ அல்லது வேற்று மத பிரச்சரவதிகளோ அல்ல. மதங்கள் மீது மக்கள் கொண்டுள்ள மூடநம்பிக்கையை சில சந்தர்ப்ப சுயநலவாதிகள் தாம் தமது சுயநலத்திற்காக பாவிப்பத்தை தான் தாங்கமுடியவில்லை. சமயம் என்பது மனிதனால் மனிதனுக்காக உருவாக்கப்பட்டது. கடவுளும் கூட. ஏன் மனிதன் இவ்வாறு உருவாக்கினான் ? என்று சிந்திக்கும் போது ஒன்று தெளிவாகும், மனிதன் தனது ஆதங்கங்களையும் ஆசைகளையும் வேறு மன அழுத்தங்களையும் சொல்லி பேசுவதற்கு ஒரு ஆழ் தேவை. அண்ணல் சாதாரண மனிதர்களால் பிறரின் குறைகளை கேட்டுக்கொண்டு இருக்க முடியாது, அகவே கடவுள் என்ற ஒன்றை உருவாக்கி அதனிடம் முறையிட்டார்கள். நமது குறைகளை பிறரிடம் சொன்னால் மன அழுத்தம் குறையும் என்பது மனோதத்துவவியல் ரீதியாக நிருபிக்கப்பட்டது. ஆகவே கடவுளிடம் சொல்லி தமது மனது சுமைகளை இறக்கி கொண்டார்கள் . அனால் இன்று சிலர் thamakave வந்து தாம் கடவுள் என்ருசொல்லிகொண்டு தமது அடம்பரசெலவுகளையும் தமது பக்தர்கள்மீது சுமத்திவிட்டு அவர்களை சாமி கொபித்துவிடும் என்று சொல்லி பயத்தில் அழுத்தி விட்டு அந்த்த சாமியார்கள் மட்டும் அரண்மனையில் சல்லாபித்திருப்பார்கள். அந்த திருகோணமலை சகோதரியை பாருங்கள். தனது மன சுமையை குறைக்க இந்த சாமியாரிடம் போய் சாமி வரம் குடுக்கலை என்று மேலும் ஒரு சோகத்தையும் கூட சேர்த்திருக்கிறார். இப்படிபட்ட (kalla )கடவுள் தேவையா? அகதிகளுக்கு நிவாரணம் கொடுக்க சொல்லி ஏன் பக்தர்களிடம் சொல்ல வேண்டும் ? இந்த்த கடவுள் விரும்பினால் தானே தனது வங்கி பணத்தை கொடுக்கவேண்டியதுதானே.
இவர்களை நினைத்து சும்மா நமது பொழுதை கழிப்பதை விட ஊரில் உள்ள ஆலமரத்தின் கீளோ அல்லது அரசமரத்தின் கீளோ உள்ள கல்லால் ஆன கடவுளை கும்பிடுங்கள், நீங்கள் விரும்பிய அளவு நேரம் நல்ல நெருக்கமாக சென்று உங்கள் குறை களை சொல்லி முறை இடுங்கள். உங்கள் மனம் சாந்த்திபெரும்.

அனைவரும் சாந்தியும் சமாதானமும் பெற்று வாழ்க!!!

அதீதன் said...

@ செந்தூரன் "பகவான் ஒருபோதும் தனக்கு விளம்பரம் தேடிக்கொண்டவரல்லர்..."

விஜய் டிவி இல் அவர் வந்து உரையாற்றும் நிகழ்வும் ஒருவகை விளம்பரம்தான்

இதற்கு என்ன சொல்வீர்கள்?

அதீதன் said...

@ செந்தூரன்
"தவிர இங்கு கொடுக்கப்படும் அத்தனை காணிக்கைகளும் அவர்களுக்கு உடனேயே பன்மடங்காகத் திரும்ப வரும் என்பது, சிறீ அம்மா பகவானை உணர்ந்து அனுபவிக்கும் மக்களுக்கு மட்டுமே கிடைத்திருக்கும்"

அப்படியானால் எல்லா அம்மா பகவான் பக்தர்களும் பல மடங்கு பணம் கிடைக்குமென்பதாலா அம்மா பகவானை சந்திக்க செல்கிறீர்கள் . எத்தனையோ புராணங்களிலும் இதிகாசங்களிலும் பணத்தாசை மற்றும் பேராசை பிடித்தவர்களை கடவும் திருத்தி நல்வழிப் படுத்தியதாகத்தான் நான் அறிந்திருக்கிறேன்
ஆனால் உங்கள் பகவானோ தனக்கு காசு தந்தாள் அது உங்களுக்கு பல மடங்காக வரும் என்று பணத்தாசையையும் பேராசையையும் வளர்க்கிறாரே இப்படி எந்த கடவுளும் செய்து நான் கேள்விப்பட்டதில்லை இதற்கு என்ன சொல்லப் போகிறீர்கள்?

VIKNESHWARAN ADAKKALAM said...

//நீ பெரியவனா? நான் பெரியவனா? என்ற கேள்வி எழுந்ததும் அங்கே ஆணவம் தலை தூக்க ஆரம்பிக்கின்றது.//

பெரியவன் சின்னவன் என்பதன் பேதம் உறுவானதற்கு காரணம் என்ன? பணமும் அதற்கு ஒரு முக்கிய பங்கு கொண்டது தானே?

சரி உண்மையில் மக்கள் சேவை என்றால் எதற்காக இந்த விலை நிர்ணய ம.. மட்டை மண்ணாங்கட்டியெல்லாம்.

பணம் இல்லாதவனுக்கு/சிரமத்தில் உள்ளவனுக்கு உதவாத பகாவான் இருந்தால் என்ன இல்லாமல் போனால் என்ன.

எஸ்.சத்யதேவன் said...

செந்தூரன் அருமையான காமெடி சொன்னீங்க

ஒவ்வொரு விசயமா வருகிறன்

முதலில் அம்மா பகாவன் சக்தி இருந்தா இந்த பாவியை நரகத்தில் தள்ளட்டும் முடியாது எனில் வழக்கம்போல சுயநலவாதியாகவாவது ஆக்கட்டும் சத்தியதேவ பகாவன் சரணம் சரணம். மு.மயுர பகவான் சரணம். வி.புருஷோத்ம பகவான் சரணம், தி. அனோஜனே சரணம் சரணம் சமூக விரோதியை எதிர்பவர்களின் பாதர விந்தங்களை வணங்கி என் வேலையத் தொடங்கிறேன்

// பகவான் ஒருபோதும் தனக்கு விளம்பரம் தேடிக்கொண்டவரல்லர்...//

அம்மா பகவான் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளவில்லையா? ஏனக்கு சிரிப்புத்தான் வருகுது ஞாயிற்றுக்கிழமைகளில விஜய் ரீ.வியில என்ன மசிர புடுங்கிறார் அதவிட ஆனந்த விகடன்ல வந்ததே அதெல்லாம் என்ன. இந்த ஊடகங்கள் தெளிவாக விளம்பரங்கள் பணம் கொடுத்துப் போடப்படுபவை அதன் நம்பகத்தன்மைக்கு நாம் பொறுப்பல்ல என்ற வார்த்தைகளையும சேர்த்துதான் விளம்பரம் பண்ணுகின்றனர் இவை உங்களின் கண்களுக்கு தெரிவதில்லையா.

அம்மா பகாவனின் தெளிவான படம் மிகவும் நேர்த்தியாக அச்சடிக்கப்பட்டு விநயோகிப்படுகிறதே இது விளம்பர நோக்கமில்லை ஒரே மாதிரியாக பக்தர்கள் தாங்கள் தாங்களே அச்சடிக்கிறார்களா? இல்லாட்டி இவர்களை விளம்பரப்படுத்தும் இவர்களின் ஏஜெண்டுகள் அச்சடித்து விநியோகிக்கிறார்களா?

கலண்டர் ஏன் விநியோகிக்கப்படுகிறது. கலண்டர்களை புடவைக்கடைகளும் ஏனைய கடைகளும் அச்சடித்து விநியோகிப்பது தமது அருளை பக்தர்களுக்கு வழங்கவா? அப்ப ஏன் அம்மா பகவான் கலண்டர் விநியோகம் நடைபெறுகிறது.

எல்லாத்ததையும் விடுங்க
//இங்கு கொடுக்கப்படும் அத்தனை காணிக்கைகளும் அவர்களுக்கு உடனேயே பன்மடங்காகத் திரும்ப வரும் //
இப்ப நீங்க பண்ணுறது விளம்பரமில்லையா விளம்பரம் என்டா என்னவென்று அறிந்துதான் கதைக்கிறீர்களா.
நான் தெளிவாகச் சொல்கிறேன் நான் சமூக விரோதியான அம்மா பகவான் என்று சொல்லப்படுகிற ……….க்கு எதிராக விளம்பரம்தான் செய்கிறேன். செய்வேன். இந்தக் கட்டுரையும் அதைத்தான் செய்கிறது என்று நம்புகிறேன்.

எஸ்.சத்யதேவன் said...

// அவரை "கல்கி" அவதாரமாக பார்த்தால், அவர் கல்கியாகவே தெரிவார்... அல்லது வேறு ஒரு பாத்திரமாக நீங்கள் நினத்தீர்களானால், அவரும் அவ்வாறே தோன்றுவார்..//

அப்ப ஒத்துக்கொள்றீங்க அவர் சமூக விரோதி என்டு.


மக்ள் மூளையில்லாதவர்களா என்ற கேட்கறீங்க ஏற்கனவே கனக கோபியும் மு.மயூரனும் பதில் தந்துவிட்டார்கள். சினிமா நட்சத்திரத்திற்குப்பின்னால் மக்கள் இலட்சக்கணக்கில் இருக்கிறார்களே அவர்ககை என்ன சொல்றீங்க எல்லாத்தையும் விடுங்க நம்மட தமிழக அரசியல் தலைவர்களை நம்பி கோடிக்கணக்கானவர் வாக்களிக்கிறார்களே அவர்களின் பொய்யை மக்கள் நம்புகிறார்களே அதென்ன எல்லாத்தையும் விடுங்க வன்னியல் மனதாபிமான நடவடிக்கை மூலம் தமிழ் மக்களை காப்பாற்றியதாக மகி்ந்தவும் அவர் அரசாங்கமும் சொல்லவதை கறைந்த பட்சம் 1கோடி சிங்க மக்கள் நம்பினார்களே

மக்கள் நம்புகிறார்கள் என்பதால் மட்டும் ஒரு விடயம் அநியாய மற்றதாகிவிடாது நண்பா

//நீ பெரியவனா? நான் பெரியவனா? என்ற கேள்வி எழுந்ததும் அங்கே ஆணவம் தலை தூக்க ஆரம்பிக்கின்றது. இதனால் பிரச்சனைகள் அதிகரிக்கின்றனவே தவிர தீர்வதில்லை.

உதாரணத்திற்கு நீங்கள் குறிப்பிட்டீர்களே, அந்த அகதி முகாம்களில் உள்ள மக்கள் ... அவர்களுக்கு அந்த நிலை ஏன் ஏற்பட்டது? எப்படி ஏற்பட்டது என்று சிந்தித்துப் பார்க்கத் தவறி விட்டீர்களே...//
இந்த வார்த்தைகளை வாசிக்கும் மனிதநேயவாதிகள் எவ்வளவு ஆத்திர படுவார்கள் நண்பா உன்னைச் சொல்லி குற்றமில்லை அம்மா பகவான் பக்தர்களை இப்படித்தான் சிந்திக்க வைக்கிறார். வைப்பார்.

உங்கள் கூற்றுப்படி ஆணவம் தலைதூக்கி சிங்கள படைகளுடன் போட்டி போட்டதால் தான் வன்னி மக்கள் இனஅழிப்புக்கு ஆளானார்கள். தப்பியவர் கேவலமாக கம்பிகளுக்குள் அடைக்கப்பட்டார்கள். இன்னும் கம்பிகளுக்கு பின்னால் இருக்கிறர்கள்.

இதற்கெல்லாம் காரணம் அவர்களின் ஆணவம்தான் சிங்கள அரசின் ஒடுக்கு முறையல்ல அப்படித்தானே. அப்படி என்றால் ஐ.நா. மற்ற மனித நேய அமைப்புகள் மனிதநேயப் போராளிகள் எல்லாம் வேறு காரணங்கள் சொல்கிறார்களே அவர்களுக்கும் ஆணவம் முத்திப்போயிட்டுதா தோழா?

எஸ்.சத்யதேவன் said...

//முதலில் ஒன்றைத் தெளிவாக புரிந்து கொள்ளுங்கள், இங்கு நடைபெறும் நிகழ்வுகள் அனைத்துமே ஒரு தெய்வீக கோட்பாட்டை மட்டுமே அடிப்படையாக் வைத்து நடந்து கொண்டிருக்கின்றன.. ... //

ஒரு தெய்வக் கோட்டபாடு என்கிறீர்கள் அத்தஐவத வேதாந்தம் பேசகிறீர்கள் இராமர், கிருஷ்ணர், யேசு, நபி என்ற பல தெய்வங்களின் தெய்த துஸதர்களின் பெயர்களைப் பயன் படுத்துகிறீர்கள்.

பார்த்தீர்களா பொய்யை நியாயப்படுத்தப் போனால் இப்படித்தான் ஆகும்
//ஏகத்துவ தர்மத்தினை யாராலும் அழிக்கமுடியாது //

ஏகத்துவம் என்பதே கொடுமையானது நண்பா. இலங்கையில் சிய்களவர் மட்டுமே அல்லது தமிழர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்பதுதான் ஏகத்துவம் என்பதின் மிக்க்கிட்டிய உதாரணம். இது சரியானதா?

பன்மைத்துவமும் பல்வகைமையம் தான் உலகம் நிலைத்திருக்க அவசியமானது என்பது விஞ்ஞான உண்மை. இத இப்படி இருக்க நீங்கள் அம்மா பகாவன் லீலைகள் விஞ்ஞான மானவை என்டு புருடா விடுகிறீர்கள்

rooto said...

அடப்பாவி செந்தூரன் நான் வவுனியா முகாம்களில் வேலை செய்யும் பலரை(அனைத்து தமிழர்களையும்) தெரிந்தவன் என்ற அடிப்படையில் கூறுகிறேன் அங்கு ஒரு அம்ம பகவன் சார்பாகவோ, அங்கிள் பகவான் சார்பாகவோ யாரும் எந்த உதவியும் செய்யவில்லை!! இப்படி அப்பட்டமக பொய் சொல்லி உங்கள் அம்மாபகவானின் சாபத்திற்கு உள்ளாகாதிர்கள். தவிர கொழும்பு பல்கலைக்கழகத்தில் அம்ம பகவான் குழு(???) ஒன்று மாணவர்களுக்கு கல்வி சொல்லித்தர முன்வந்து எல்லாம் அறம்புறமான ஆயத்தங்களை செய்தார்கள்.நானும் அதை நம்பி வேலைய செய்வம் எண்டா அங்க ஒரு மயிரும் நடக்கல்ல!!! பிறகு தமிழ்சங்கம் மூலமாக நாங்கள் குறிப்பிட்ட ஒரு செறுவட்டமே மேற்படி கல்வி உதவிகளை மேற்கொண்டது. தமிழ்சங்கத்தில் ஒவ்வொரு தரத்திற்கும் வினாத்தாழ் தயாரிப்பதில் இருந்து, அதை அங்கு கொண்டு சென்று வினயோகித்து, அங்கு குறிப்பிட்ட இடத்தில் அவர்களுக்கு பாடம் சொல்லிகொடுத்து, அதற்காகவேண்டிய உபகரணங்களைக்கூட எந்த அங்கிள்பகவானும் வாங்கிதரவில்லை, அவருடைய முட்டாள் பக்தர்களும் வாங்கிதரவில்லை. நாங்கள் எங்கள் சொந்த பணத்தில், அதுவும் அரசியல் வாதிகள்(தாடி வச்சவங்க கூடா ) தர இயலாது என்று சொன்ன பணத்தை, உபகரணங்களை எங்கள் சொந்த காசில வாங்கி செய்ய உன்னை மாதிரி ஆக்கள் அதை ஏதோ நாய் பகவானின்ர செயல் எண்டுறாய்!!! ஒரு போட்டோகொப்பி மிசின் வாங்க மிக மிக குறைவான இந்துகல்லூரியில் படித்த என்சக நண்பர்கள்(10ற்கும் குறைவானவர்கள்) சொந்த முயற்சியில் வாங்கி அந்த பிரதியெடுப்பு நடைபெற்றது. இப்பவும் அந்த மிசின் கொழும்பு தமிழ்சங்கத்தில் சேவையில் உள்ளது!!! சும்மா அம்ம பகவான், அப்ப, அங்கிள் பகவான் எண்டு பீல விடாதை. எங்கட உளைப்பை யாரோ ஒரு நாய்க்காக நாங்கள் தாரை வார்க்க தயாரில்லை.

எஸ்.சத்யதேவன் said...

// மனிதன் மனிதனாக வாழ வேண்டும்! அதுவே மிக முக்கியம்.//

மனிதனாக வாழவதென்றால் என்ன அம்மா பகவானைக் கும்பிடுதல் அல்லது அவருக்காகப் பிரச்சாரம் செய்தல்தான் மனிதனாக வாழவதா இந்த மனிதனாக வாழவதெல்லாம் டுபுக்குகள்ற ஆயுதம் பேரினவாதிகளுக்கு ஒடுக்குமுறை மனிதம் தமிழருக்கு விடுதலை மனிதம் ஆதிகக் சாதிக்கு சாதியாய் வாழவது மனிதம் திலத்துக்கு அதை எதிர்ப்பது மனிதம் முதலாளித்துவத்திற்கு முதலாளித்துவம் மனிதம் சோசலிசத்திற்கு அதை எதிர்ப்பதே மனிதம் மகிந்தவுக்கு 20000 பேர் ஓரேநாளில் கொல்லப்படுவது மனிதம் மனித நேய வாதிகளுக்கு அது இன அழிப்பு எனக்கு சமூக விரோதியான அம்மா பகாவனை எதிர்ப்பது மனிதம் உங்களுக்கு என்னை எதிர்ப்பது மனிதம் இப்படி மனிதம் என்பதே அவரவர் நிலைசார்ந்து வேறுபடுகிறது.

முதலில் நீங்கள் மனிதனாக வாழவது என்றால் எப்படி என்ற சொல்லிவிடடு மனிதனாக வாழவது முக்கியம் என்றமாதிரி கதைகளை கதையுங்கோ அதன் பிறகு தீர்மானிப்பம் அது முக்கியமா இல்லையா என்டு.

எஸ். said...

கடைசியாக
//யாரும் யாரையும் தூண்டி விடுவதில்லை நண்பரே...//
பெரிய அறியாமை இதுதான் இந்தக் கட்டுரை அம்மா பகவானை நம்ப தயாராகும் மனிதர்களை அதை நம்பவேண்டாம் என்டு தூண்டிவிடும் இந்த போலி சாமியி்ன் பொய்களை எதிர்க்கவேண்டும் என்ற உணர்வை ஒரு சிலருக்கு தூண்டிவிடும் என்பதால்த்தானே நீங்கள் இங்கு பின்னூட்ட மிட்டீர்கள். உங்கள் பின்னூட்டம் கட்டுரையாளரின் கருத்துமீது சில சிராய்ப்புகள எற்படுத்தி வாசகர்களை தூண்டிவிடும் என்றுதானே நான் பின்னூட்டமிட்டேன் இதுவே இப்படி இருக்க

நீங்கள் விளம்பரம் பண்ணினது மட்டுமி்ல்லாமல். பாரிய அளவில் விளம்பரம் பண்ணிக்கொண்டே அம்மா பகவான் யாரையும் தூண்டி விடுவதில்லை என்ற சொல்ல உங்களால் எப்படி முடிகிறது தோழா

நான் உனக்காகவாவது இனி அம்மா பகாவன் என்ற சமூக விரோதியை தீவிரமாக எதிர்க்கப் போகிறேன்

அதீதன் said...

அதிரடியாய் பின்வாங்கும் அம்மா பகவான்....

அம்மாபகவானை பார்க்க 10,000/= தொடக்கம் 20,000/= வரை வசூலிப்பது ஊர் அறிந்த கதை .... அந்த குற்றசாட்டில் இருந்து தன்னை விடுவித்துகொள்ள அம்மா பகவான் வெளியிட்ட அறிக்கை இது .....

தங்களுக்கு தெரியாமல் தங்களை சுற்றியுள்ளவர்களால் தான் இப்பணம் அறவிடப்படதாக இப்பொழுது இவர்கள் கூறுகிறார்கள் ..

தங்களை சுற்றி நடக்கும் அயோக்கிய தனங்களை கூட கண்டுபிடிக்க முடியாதவர்கள் .... மக்களையும் , உலகத்தையும் எப்படி காப்பாற்றப்போறார்கள் .....

வேடிக்கையிலும் வேடிக்கை ........

http://img94.imageshack.us/img94/4352/14056001.jpg

நன்றி பிரசாந்தன் அண்ணா

Anonymous said...

பின்னூட்டம் இட்டவர்களுக்கு நன்றிகள்

Anonymous said...

Is there any prove for amma bhagavan is God?? Mr.Sendhuran & Others supporting that bald head and fat women sitting in a throne and making fool of poor fellows....Who are you supporting?? Its just the aspect that someone is greater than your personality. If you see something is more than that kalki & his wife surely the mind will go for it. First give us proof with evidence of he is god. Dont bring people and say I got transformed, I got job, I got money etc. There are so many instances & stories of how different god and goddess forms appeared and helped and helping man. How is your Kalki different from them. First give us exact evidence of it. We have evidence in the cds released by cosmic through which the bald head makes money...I can quote a number of them. He said in one youth vedio that whole of India youths will become prosperous in 2008 it never happened. He said IT field will be on top for next 50 yrs what is the current status of IT field all over the world??!! he promised once golden temple is inagurated enlightenment will spread like forest fire, now he is telling old things have to die for newthings to come in the recent vedio chat on skype with russians and mexicans!!!!! & says enlightenment will happen in 2012!!! & we expect it to happen-->>>> so he is not sure of it>>>??? We have the vedios in hand in internet for all to see. What do u comment on his controversial statements?? you guys mean to say he has amnesia?

One more thing the acharyas and his son leaving the movement is for money as some one has asked here. The problem is not that they are fighting for that money actually they are making money...


want to know how??? These people are good in mind games and sowing seeds. What I can read is >>>>(note its my wild but sure guess) The acharyas and kalkis son have left intentionally and its with the full consent of kalki.

Now Russians Germans and others world wide feel ( I saw it in the vedio conferences posted If you want I can also search through google and send u links but I feel its easy to get it thro google for u all) Poor Bhagavaan he taught the acharyas and krishna so much and now they have left. Feeling pity on this guy they will come in mass and work in mass to support the fellow. They give lot of money too. This is their mission. Once the mission is achieved, according to the cults plan the acharyas and krishna (son of kalki) will come back & tell sorry bhagavan excuse us and take us back. Kalki will now cut a big god man figure and accept them. Now they will do propaganda how merciful is kalki that he took those people who left without any gratitude. Again out of this they will gain so much. This should be their plan......

Apart from this in one vedio kalki says Samadharshini, Anandagiri are all fully enlightened. Now he says after they left they were in higher states of enlightenment and it will drop when kundalini or the energies in energy centres of the body drop. He adds actual enlightenment is different from enlightenment state!!!

See how he cheats.... Full enlightened at first.....Higher levels of enlightenmen....Enlightenment is different from Enlightenment state


He has stated in many public talks one G.C is opened enlightenment can happen fast and it will be done even before 2010 .....He has not specified any date.....

Mind screwing techinques to steal and loot money. I just want tellone thing beware of such cults and dont go to them. You are being cheated by showing big and invisible things like enlightenment etc... When the great acharyas are not yet enlightened according to kalki how can be give enlightenment to mass...??? They are said to be with him from childhood according to kalki cult. First of all is he enlightened????


Sorry I had to type so much as I can see my fellow Indians plundered by such cults.

Thnks a lot

மசிர் பகவான் மண்ணாங்கட்டி said...

சும்மா பகவான் பக்தர் செந்தூர அடியாருக்கு வணக்கம்

தாங்கள் சும்மா பகவானின் கொள்கை பரப்பு செயலாளராக தங்கள் கடமையை செய்வதற்கு அவர்கள் தரும் பணத்தைவிட அதிகமாக பணம் தருகிறேன்

நான் புதிதாக ஆரம்பி்க்க இருக்கும் மசிர் பகாவன் மண்ணாங்கட்டியின் ஆச்சிரமத்தின் அந்தப்புரத்தின் அந்தரங்கச் செயலாளராக கடமை புரிவீர்களா. தாங்கள் எதிர்பார்க்கும் சகல வசதிகளும் செய்து தரப்படும்

மன்மதன் said...

Mr. Senthuran உங்களுக்கு ஒரு விடயம் தெரியுமா?

”கேக்கிறவன் கேனயனா இருந்தால் எருமை மாடும் ஏரே பிலேன் ஓடுமாம்”

உங்கள் அம்மா (சும்மா) பகவானிட்ட போகிற இலட்சக்கணக்கான அப்பாவி முட்டாள்கள் மட்டும் தான் மனிதா்களா? உலகத்தில 600 கோடிக்கு மேல மனிதா்கள் இருக்கின்றனர். உங்களை சுற்றி இருக்கிற எத்தனை பேர் அம்மா (சும்மா) பகவானை நம்புகினறனா்? உங்களையும் உங்களைப் போன்ற சில டோங்கிரிகளையும் தவிர.......

அதீதன் said...

கடவுள் தூணில் இருந்தும் துரும்பில் இருந்தும் வருவார் என்று நான் கேள்விப் பட்டிருக்கிறேன் ஆனால் skype வருவார் என்று நான் கேள்விப்பட்டதில்லை. நாளை அந்த கூத்து திருகோணமலையில் நடக்கப்போகிறது சகிப்பே மூலம் தீட்ச்சை தரப்போகிறாராம் அம்மா பகவான். இதற்கு சன் கேபிள் மூலம் விளம்பரம் வேறு செயப்பட்டிருக்கிறது 26 ம் திகதி 3 மணிக்கு இந்தக் கூத்து அரங்கேற இருக்கிறது.அதற்க்கு ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டுமாம். சகிப்பே இல் ஒரு மணிநேரம் கதைப்பதற்கே ஐம்பது ரூபாய்தான் செலவு ஆனால் அதற்கு ஏன் இவ்வளவு பணம்? யாரவது அம்மா பகவான் பக்தர்கள் பதில் சொல்லுங்கள்.

வி.புருஷோத்தமன் said...

//பகவான் ஒருபோதும் தனக்கு விளம்பரம் தேடிக்கொண்டவரல்லர்...//

செந்தூரன் நீங்கள் பத்திரிக்கை படிப்பவர் தானே. அதிலே வருகின்ற அம்மா பகவானின் விளம்பரங்களை பார்த்ததில்லையா?????????????

v.purusothman said...

என்ன செய்ய பழங்கால கொள்கை வகுப்பாளர்கள்(பார்ப்பனர்) தங்கள் இருப்புக்கு கேள்வி வரக் கூடாது என்பதற்காக இயற்றிய பொய் இவ்வாறு போலிச் சாமியார்கள் உருவாகுவதற்கு காரணமாக அமைந்து விட்டது.

Unknown said...

நீங்கள் அதில் குறிப்பிட்டது போல் ஸ்கைப் நிகழ்விற்கு 1000ரூபா கேட்டதை உங்களால் நிரூபிக்க முடிந்தால் நேரடியாக திருகோணமலையிலுள்ள எந்த சற்சங்கத்திலும் அந்த நபரை நேரடியாக கூட்டி வந்து நிரூபிக்க முடியுமா? உங்களுக்கு இப்படியான சிந்தனைகள் இருக்கும்வரை உங்களால் இறைவனின் எந்த அனுக்கிரகத்தையும் பெற முடியாது.உங்கள் வாழ்க்கை முழுவதும் இப்படியான எதிர்மறை எண்ணங்கள் ஓடினால் உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதும் விளங்குகின்றது. நீங்கள் முதலில் உங்களை அறிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். உங்களை சரியாக நீங்கள் விளங்கி கொண்டால் இப்படியானஎதிர்மறைஎண்ணங்கள் தோன்றுவதை தவிர்த்துக் கொள்ளமுடியும்.

அதீதன் said...

ஆரம்பத்தில் இந்நிகழ்வுக்கு கட்டணம் வாங்குவதாகத்தன் தகவல் கிடைத்தது இதை அம்மா பகவான் பக்தன் ஒருவனே கூறினான் அதன் அடிப்படையில் அந்தப் பின்னூட்டம் இடப்பட்டது இந்த நிகழ்வில் கட்டப்பட்ட banner இல் கூட அவை இலவசம் என்ற எந்த அறிவிப்பும் இல்லை அது ஒரு சாதாரண வர்த்தக விளம்பர் போன்றே இருந்தது.அகவே வழக்கம் போலவே இதுவும் என்று தீர்மானித்தேன்.ஆயினும் நான் அந்த நிகழ்வுக்கு போகும் பொது என்னிடம் எந்தக் கட்டணமும் அறவிடப் படவில்லை. இது எதிர்ப்பை எதிர்கொள்ளும் அவர்களின் தந்திரங்களில் ஒன்று எனக் கருதுகிறேன். மற்றும் படி அவர்கள் பணம் பறிப்பதட்கு போதிய ஆதாரங்கள் பல உள்ளன.

இங்கே கொடுக்கப் படும் பணம் இரட்டிப்பாக வரும் என்ற உங்கள் நம்பிக்கைகளே அதற்கு ஒரு சான்று.

உங்கள் banner ஐ பார்க்க இந்த link ஐ click செய்யவும்

http://img689.imageshack.us/img689/101/20165106836562661118100.jpg

Unknown said...

Christian Obits என்ற ஐரோப்பிய ஒன்றிய மருத்துவ விஞ்ஞானி வழங்கிய அறிக்கை இது...

" விஞ்ஞானத்தின் கோணத்தில் பார்க்கும்போது, அம்மாபகவானின் தீட்ஷை என்பது அதீத சக்தியும், விஞ்ஞானபூர்வமும் கொண்ட மனித வரலாற்றில் நாம் கண்டு கேட்டுப் பார்த்திராத ஒன்று. இயற்கையின் சக்தி சஞ்சாரங்களுக்குஒன்றி இது மனிதனின் வடிவமைப்பிலேயே மாற்றங்களை ஏற்படுத்தும் தன்மை கொண்டிருப்பது மிகுந்த ஆச்சர்யத்தை அளிக்கின்றது. தற்சமயம் நான் தீட்ஷையில் மேல் நுணுக்கமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருக்கிறேன். இந்த மூளையை, தீட்ஷையின் உன்னத சக்தியை மேலும் ஏற்று பயன்பெறச்செய்யும் காரணிகள் என்னெவென்று கண்டறிவதுகூட இதனுள் அடக்கம்.

விஞ்ஞானத்தையே தட்டி எழுப்பி பல புதிய விஷயங்களை அறிவியலின் பார்வைக்குக் கொண்டு வந்து திகைக்க வைத்திருக்கும் இந்த தீட்ஷையைப்பற்றி ஆராய்வதற்கு மிகுந்த ஈடுபாட்டுடன் இருக்கிறோம். விஞ்ஞானமும் ஆன்மீகமும் இணைந்து, ஒன்றையொன்று ஆதரித்து, ஒன்றையொன்று பூர்த்தி செய்யும் மனித வள‌ர்ச்சியின் கடைசிக் காலகட்டத்தின் வெற்றி முரசை இந்த தீட்ஷையே முழக்கினாலும் ஆச்சரியமில்லை...! "

கிறிஸ்டியன் ஓபிட்ஸ், Neuro Scientist, Physicist(நரம்பியல் விஞ்ஞானி),
ஐரோப்பா

மு. மயூரன் said...

செந்தூரன்,

Christian Obits என்ற பெயரை இணையத்தில் தேடிப்பார்த்தேன். அவர் அவ்வளவு பிரபலம் இல்லை போலும். கூகிளில் அவர் பெயர் சிக்குகிறதில்லை. நீங்கள் எடுத்துக்காட்டிய அவரது கருத்து எங்கேயும் கிடைக்கவில்லை.

தயவு செய்து அவர் கூறிய அக்கருத்துக்கு சான்றாக அமையும் இணைய முகவரியையோ புத்தகத்தின் பெயரையோ அல்லது அவர் எங்கே அக்கருத்தினைக் கூறினார் என்ற தகவலையோ தந்துதவ முடியுமா?

Unknown said...

@அஜந்தன்,

தங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
மேலும், இங்கு மதம் என்ற ஒன்று கிடையாது. அம்மாபகவானின் சங்கல்ப நோக்கமும் அதுவல்ல. அது, மனிதனை அவனது மனதின் பிடியிலிருந்து விடுவிப்பதன்மூலமாக, அனைத்து விதமான துயரங்களில் இருந்தும் விடுவித்து ஒரு உயர்ந்த சைதன்ய நிலைக்குள் கொண்டு செல்வதே ஆகும். இங்கு நீங்கள் குறிப்பிட்டதைப்போல முழுக்க முழுக்க மனோதத்துவவியலை அடிப்படையாகக் கொண்ட ஆன்மீக வழி.

நீங்கள் நினைக்கக்கூடும், மனதிற்கும் ஆன்மீகத்தும் என்ன சம்பந்தம் என்று. ஆனால் இந்த மனித மனம் பூமியினுடைய மத்திய பகுதியில் உள்ள சில வகையான காந்த மண்டலங்களின் ஆதிக்கத்தின் கீழ் உள்ளது. இதன் பிடியில் மனது உள்ளபோது, மனிதனால் துயரங்களையும் பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டியிருக்கும். அதனைப்பற்றி சிறீ பகவான் கூறியதை இங்கு பிரசுரிக்கிறேன். அதனை வாசிக்கவும். ஆனால் இவை அனைத்தும் பன்நாட்டு விஞ்ஞானிகளால் நேரடியாக இந்தியாவுக்கு வந்து ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு வழங்கப்பட்ட மிகத்துல்லியமான அறிக்கைகளே!

Unknown said...

சிறீ பகவான் கூறுகிறார்...

"இந்த பூமியானது சில காந்த மண்டலங்களைக் (Magnetic field)கொண்டுள்ளது என்பது உங்களில் அனேகமானோருக்குத் தெரிந்திருக்கும். பூமியின் உட்புறத்திலே உருகிய நிலையில் இருக்கும் பகுதி (Earth’s molten core) இயங்கிய நிலையில் காணப்படும். இவ்வாறு இயங்குவதாலே இவ்வகையான காந்த மண்டலங்கள் உருவாக்கப்படுகின்றன.

இவ்வாறு உருவாக்கப்பட்ட காந்த மண்டலங்களின் ஆதிக்கத்தின் கீழேயே, மனித மனங்களினுடைய எண்ணங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் இந்த ஈர்ப்பு மையங்கள் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக செயற்திறன் இழந்து காணப்படுகின்றன.

தற்காலத்தில், பௌதீகவியலில் குறிப்பிடப்பட்டுள்ள Schumann’s Resonance எனும் கருவியால் பூமியினுடைய காந்த மண்டலத்தின் அளவு கணிக்கப்படுகிறது. பல நூற்றாண்டுகளாக இதனுடைய அளவு 7.80cps (Cycles per second) ஆக இருந்தது. ஆனால் கடந்த ஏழு, எட்டு வருடங்களாக இது 11cps ஆக அதிகரித்துக்கொண்டு வருகின்றது.

நாம் கணிதவியல் ரீதியாக நோக்குமிடத்து, 2012ம் ஆண்டளவில் இந்த சுழற்சி இயக்க அதிகரிப்பு 13cps ஆக உயர்வடைய இருக்கின்றது. இது இவ்வாறு 13cps ஆக உயர்வடையும்போது, பூமியின் உட்புறத்தில் சுழற்சியில் ஈடுபட்டிருக்கும் பகுதி சுழற்சியிலிருந்து (rotating) விடுபட்டுக்கொள்ளும். இதன்போது சுழற்சியின் விளைவால் ஏற்படுத்தப்படும் காந்த மண்டலம் செயலற்றுப்போகும். எனவே காந்த மண்டலத்தின் பிடியில் உள்ள உங்களுடைய ‘மனம்’ இல்லாது போய்விடும். நான் இப்போது குறிப்பிட்ட ‘மனித மனம்’ என்பதை நாம் கருதுவது ‘சம்ஸ்காரம்’. இவ்வாறு கடந்த 11000 வருடங்களாக அழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கும் ‘சம்ஸ்காரங்கள்’ திடீரென அற்றுப்போய்விடும்.

இந்த தர்மாவிலே நாம் குறிப்பிடுவது, “மனது ஒரு கர்மா”. கர்மம் என்பது நாம் செய்த செயலுக்கான வினை. மனிதனின் அனைத்துத் தொழிற்பாடுகளுமே மனதிலிருந்தே ஆரம்பிக்கின்றன. உண்மையிலேயே, மனது; நமது சம்ஸ்காரங்களை சேமித்து வைக்கும் இடம், அல்லது முற்பிறவிகளின் வாசனாக்கள் வெளிப்படும் ஒரு இடம் (Storehouse of Samskaras or Past Vasanas). நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போல, இந்த மனதிலே சேர்த்து வைக்கப்பட்ட அனைத்து விதமான கர்மாக்களும் (பாவங்கள்) பூமியினுடைய காந்த மண்டலத்திலே சேமித்து வைக்கப்பட்டுள்ளன.

தொடர்ச்சி...

Unknown said...

தொடர்ச்சி...

ஆனால், 2012ம் ஆண்டில் இந்த காந்த மண்டலம் சில நாட்களுக்கு பூச்சிய நிலையில் இருக்கும். அதன் பின்னர் பூமியின் உட்புறத்திலுள்ல பகுதி திரும்பவும் இயங்க ஆரம்பிக்கும். ஆனால், இது மனிதனுக்கு புத்தம் புதிய ஆரம்பமாக இருக்கும். இவ் அரிய நிகழ்வு பல கோடி ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் நடைபெறும். ஏழேழு ஜென்மமாக நமது மனதிலே சேமிக்கப்பட்டு வந்த நமது பாவங்களும் அவற்றால் ஏற்பட்ட பிரச்சனைகளும் திடீரென முடிவுக்கு வந்துவிடும். இதுவே சத்ய யுகமாகவும் இருக்கப்போகிறது (Golden Age).

“இது இவ்வாறு நடக்கும் என்பது உங்களுக்கு எப்படி தெரியும்?” என்று நீங்கள் நினைக்கக்கூடும். இவை அனைத்தும் புதைபொருள் ஆய்வுகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டவை. கிட்டத்தட்ட பதினொராயிரம் வருடங்களுக்குப் பின்னர் கிடைத்த சான்றுகள் இவை.

இந்த பூச்சிய நிலையில் காணப்படும் மிகச்சிறிய கால இடைவெளியில் நாம் அனைவரும் மீண்டும் புத்துணர்வு பெறுவோம். எனவேதான் நீங்கள் இந்த 2012ம் ஆண்டில் ‘ஜீவன் முக்தி’ நிலையை அடைய வேண்டும் என நாம் விரும்புகின்றோம்.
உங்களின் அனைத்து சம்ஸ்காரங்களும் வெளியேறி, நீங்கள் ஜீவன் முக்தி நிலையை அடைந்துவிட்டால் (Enlightened), நாம் அனைவரும் ஒரு புதிய யுகத்தினுள் வாழ்க்கையைத் தொடங்கி விடுவோம். இத்தகைய உன்னதமான யுகமே ‘சத்ய யுகம்’ என அழைக்கப்படுகின்றன. இதன்போது மனித இனம் ஒரு உயர்ந்த சைதன்ய நிலைக்குள் உள்ளடக்கப்பட்டுவிடும்.

நாம் முற்குறிப்பிட்டது போல, பூமியின் எதிரொலியானது (Earth’s resonance) அதிகரிக்கின்றது. இது குறிப்பது என்னவென்றால், பூமியினுடைய இருதயப் பகுதியானது மாற்றத்தை அடைய இருக்கின்றது. நமக்கு ஒரு உடல் இருப்பதைப் போலவே, நமது பூமிக்கும் ஒரு பௌதீக உடல் இருக்கின்றது. கூடவே உணர்வு நிலையும் உள்ளது.(Consciousness)

இவ் எதிரொலிகளானது (Resonance)அதிகரிக்கும் போது, இந்த பூமியினுடைய இருதயப்பகுதியின் தொழிற்பாடு முன்பிருந்ததை விட வேறுபட்டு இருக்கும். இப்போது நமது இருதயமும், பூமியினுடைய மையப்பகுதியும் தொடர்பு பட்டிருக்கும். பூமியினுடைய மையப்பகுதியானது (இருதயம்) உங்களுடைய இருதயத்திற்கு எதிராக செல்வாக்குச் செலுத்தும்.

எனவேதான் உங்களுடைய இருதயத் துடிப்பும், பூமியினுடைய எதிர்விளைவும் (Earth’s Resonance) ஒத்திருக்க வேண்டியது முக்கியமானதாக கருதப்படுகின்றது. இது உங்களுடைய ‘இதய மலர்வைக்’ குறிக்கின்றது. நீங்கள் உங்களுடைய உறவுமுறைகளில் அன்பைக் கண்டுபிடிக்கும் போது தான் இந்த இதய மலர்வு ஏற்படுகின்றது.

இவ்வாறு நீங்கள் அன்பைக் கண்டுபிடித்துவிட்டால், நீங்கள் உள்ளூர உங்களது பெற்றோரையும், வாழ்க்கைத் துணையையும் சீர்தூக்கிப் பார்ப்பதை (Judging) நிறுத்தி விடுவீர்கள். இவ்வாறு அடுத்தவர்களது குற்றங்குறைகளை சீர்தூக்கிப் பார்க்கும் வழக்கம் முழுமையாக இல்லாது போகும்போது உறவுமுறைகளில் ஒற்றுமை நிலவும். அன்பு பெருகும்!

எனவேதான் வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்கத் துவங்குவீர்கள். வாழ்வே அனுபவம் மிக்கதாகிவிடும். இதுவே 2012ஆம் ஆண்டில் நடைபெற இருக்கின்றது. சத்யயுகம் பலகோடி ஆண்டுகளுக்குப் பின் மறுபடி மலர இருக்கின்றது!

-ஸ்ரீ பகவான்.

Unknown said...

[b]
என்னப்பா செந்தூர ...... நீ சும்மா சாமியாரின் ஆளாகவே இருந்து விட்டு போ... ஏனப்பா அப்பாவி மக்களை எமற்றுகிரிர்கள்.. கடவுளை மட்டும் நம்புங்கள்.. இந்த கலி யுகத்தில் நான் தான் kadavul என்பவனை நம்பதிர்கள்... என்ன இந்த கேவலமான செயல்... உங்களை போல் ஒரு ஆள் எங்கும் இருக்க மாட்டார்கள்.... இந்த கட்டுரை யாரும் படித்து மனம் மாற கூடாது என்று நீ ( செந்தூரன்) வேலையே மினக்கிட்டு இவளவு பெரிய comment post பன்னுகுறை... மக்களை எம்மற்றியது போதும்... எவரேனும் மக்களின் கண்களை திறக்க முயச்சி செய்தல் நீ என்னய இப்படி செய்கிறாய்... என்ன செய்தலும் நீ திருந்த போவது இல்லை senthuraa ...... அனால் மக்கள் எந்நாளும் முடர்கள் அல்ல......
--------- பாலாஜி [/b]

மு. மயூரன் said...

இத்தனை வெட்டி முழக்கும் செந்தூரன் இன்னும் நான் Christian Obits பற்றி கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவில்லை. லாவகமாக யாரோ நரம்பியல் அறிஞர் கருத்தென்று தூக்கிப்போட்ட கருத்துக்கு ஆதாரம் கேட்டேன். பதிலைக்காணோம்..?

ஆகக்குறைந்தது அந்தக்கருத்தை எங்கே வாசித்தீர்கள் என்றாவது சொல்லுங்கள் செந்தூரன்..

Anonymous said...

this is not how u treat god

Unknown said...

@பாலாஜி!
நான் இந்த விஞ்ஞான விளக்கத்தை மேற்குறிப்பிட்ட சிலர் பொய் என்று குறிப்பிட்டிருந்தார்கள். அதற்காகவே நான் இதனை இங்கு குறிப்பிட்டேன். மேலும் இங்கு தேவையில்லாமல் பொழுதைக் கழிக்கவோ அல்லது வீண் வம்பு பேசவோ நான் இங்கு வரவில்லை. அதற்கு எனக்கு நேரமும் கிடையாது விருப்பமும் கிடையாது. அதனால் நான் இந்த தளத்திற்கு வருவதேயில்லை. இந்த மாதிரியான தளங்களை உபயோகிப்பதும் இல்லை... பெயரைப்பார்த்தாலே தெரிந்திருக்கும் இது எப்படிப்பட்டது என்று!

"கேவலம்" என்று குறிப்பிட்டிருந்தீர்கள்! எது சரி எது தவறு எது கேவலம் என்று உங்களுக்கே இன்னும் சரியாகத்தெரியாமல் எப்படி அடுத்தவர்களைக் குறைகூற மட்டும் முன்நிற்கிறீர்கள்???

இந்த வேலை இதை மாதிரி யாராவது வேலை வெட்டி இல்லாமல் இருக்கிறவைக்குத்தான் சரி........ தொடர்ந்தும் நான் வருவேன் என எதிர்பார்க்க வேண்டாம்.

சரி, இந்த விளக்கம் ஆங்கில புத்தகம் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. The Power of humanity suffer and healing என்ற புத்தகத்தில் மருத்துவ சஞ்சிகைக்காக ஐரோப்பிய ஒன்றிய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தில் வழங்கப்பட்ட‌ அறிக்கை.

மேலும் சிலரின் குறிப்புகளையும் கடைசியாக தருகிறேன்... ஆனால் அதனை விள‌ங்கிக்கொண்டு கதைக்கும் அளவிற்கு இங்குள்ளவர்கள் இருப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கில்லை.

மு. மயூரன் said...

//இந்த மாதிரியான தளங்களை உபயோகிப்பதும் இல்லை... பெயரைப்பார்த்தாலே தெரிந்திருக்கும் இது எப்படிப்பட்டது என்று!//

செந்தூரன், இந்தத் தளத்தின் பெயரில் என்ன பிரச்சினை? கள் என்பது தற்காலப் பன்மை விகுதி. எதையும் ஒருமையாக, தனியனாக, பார்க்காமல் கூட்டாக, பன்மையாகப் பார்க்கின்ற அரசியற்பார்வை பற்றியது இந்தப்பெயர். அதில் ஏதாவது பிரச்சினையா உங்களுக்கு?

//சரி, இந்த விளக்கம் ஆங்கில புத்தகம் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. The Power of humanity suffer and healing என்ற புத்தகத்தில் மருத்துவ சஞ்சிகைக்காக ஐரோப்பிய ஒன்றிய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தில் வழங்கப்பட்ட‌ அறிக்கை.//

காந்த மண்டலம் தொடர்பான விளக்கமா?
அதன் மூலத்துக்கான web address ஏதுமிருந்தால் மேலதிக விளக்கங்களை நாம் கற்றறியலாம்.


செந்தூரன்,

உங்களிடம் "கிறிஸ்டியன் ஓபிட்ஸ், Neuro Scientist, Physicist(நரம்பியல் விஞ்ஞானி"
பற்றி தொடர்ச்சியாகக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். பதிலளிப்பதாய் தெரியவில்லை. ஆகக்குறைந்தது அவரது அந்தக்கருத்து வெளிவந்த நூல் எது என்றாவது சொல்லுங்கள்.

root said...

appapa...
thirupi thodangitangal aya...
enaku ondu than sola varuthu
ungal manasatchiku unmaya nadanthu kolunga

bobby said...

நன்றி rooto. அம்மா பகவான் உதவி செய்தார் என்று கூறும் பக்தர் ஆதாரபூர்வமாக கதைத்த்ல் வேண்டும். நான் கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞானபீடத்தில் படிக்கின்றேன். அங்கு படித்து வேலை செய்த ஒரு பக்தர் என்னிடம் வந்து உதவி செய்யவேண்டும் என்று கூறியபோது நான் அங்கு அவருக்கு எல்லா விதத்திலும் உதவியளிப்பதாக உறுதியளித்தேன். இதற்காக எனது பல்கலைக்கழக தமிழ்ச்சங்க ஆண்டு பொதுக்கூட்டத்தில் கூட சிறிது நேரம் அவருக்காக ஒதுக்கி அனத்து பீட மாணவர்களையும் ஒத்துழைக்கும்படி வேண்டுகோள் விடுத்தார். அவர் நிதியுதவி மற்றும் படிப்பித்தல் வசதிகள் தேவை எனக்கூறினார். ஆனால் அவர் யார் சார்பாக இவற்றையெல்லாம் செய்கின்றார் என அறியத்தரவில்லை. இதேவேளைதான் பாடசாலை நண்பர்கள் மூலமாக கொழும்பு தமிழ்ச்சங்கம் ஆற்றவுள்ள பணிகுறித்து அறிந்தேன். அவர்களிடம் இதனைப்பற்றிகூறியபோது அவர்கள் இது அம்மா பகவான் பக்தர்களின் பித்தலாட்டம் எனக்கூறினர். நான் அப்போது அதனை நம்பவில்லை ஆனால் அந்த பக்தரோ நான் இதுபற்றி தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டபோது "செய்யோணும், செய்யோணும்" என்பதை கூறினாரே தவிர அதற்கான ஒரு முயற்சியும் எடுக்கவில்லை. உதவிசெய்வதற்கு நிதியுதவி எதற்கு?? அம்மாபகவானின் பணம் ஏழைகளுக்கும் கஷ்டப்படுகிறவர்களுக்கும் போகாதாமா?? பணக்காரர்களுக்குதான் போகுமா??

ஒன்றை மட்டும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இறைவன் எனபவன் இந்த உலகத்தில் பணத்தால் வாங்க முடியாதவைகளைத்தான் அருளுவதற்கு துணைபுரிவானே தவிர பணம் தருகிறேன் விரும்பியவைகளை வாங்கிக்கொல் என்று கூறமாட்டான். இறைவனுக்கு பணத்தால் காணிக்கை கொடுத்ததாக எந்த ஒரு வரலாறும் இல்லை. வியாபார நோக்கத்தோடு செயற்படும் சிலரால்தான் இறைவனின் பெயரும் கெடுகின்றது. இந்த உலகில் பணத்திற்கு பஞ்சமில்லை.... உணவுப்பஞ்சம் தலைவிரித்து ஆடுகின்றது... ஏன் அம்மா பகவானால் பணத்தைத்தவிர வேறு எதையுமே இரட்டிப்பாக்க முடிவதில்லை?? அவற்றை வைப்பிலிட்டாலோ அல்லது பங்குச்சந்தையிலோ முதலீடு செய்ய முடியாது என்பதாலா??

இதுவரை பூப்பாதை..இனி புலிப்பாதை

ஏன்டா டேய், என்ன தைரியம் இருந்தால் கண்ணனையும் ராமரையும் இயேசுவையும் உன்ட அம்மா பகவானுக்கு ஒப்பிடுவாய்?? அவர்கள் என்ன உன்ட அம்மா பகவான் மாரி காசு வாங்கியா தரிசனம் குடுத்தவய?? இல்லாட்டி பைன்னன்ஸ் கம்பெனி நடத்தினவையா?? இல்லாட்டி உப்பிடி மாடமாளிகை கட்டி சொகுசா வாழ்ந்தவையா?? இல்லாட்டி நாந்தான் கடவுள் எண்டு சொல்லிக்கொண்டு திரிஞ்சவையா?? அவர்களின்ட நோக்கமே அதர்மம் அழித்து தர்மம் நிலைநாட்டல் என்பது....உன்ட அம்ம பகவானின்ட பிறப்பு நோக்கம் என்ன எண்டு சொல்லு பாப்பம்...சும்மா இதில இருந்து உதார் இதார் விடாத, "உங்களுக்கு இது புரியாது" எண்டு!! உன்ட அம்மா பகவானின்ட பிறப்பிலிருந்து இப்பவரை வரலாறு தெரியுமாடா?? எப்ப அவ பகவானானவ?? ஏன் ஆனவ எண்டு தெரியுமா?? உன்ட அம்மா பகவானால இருக்கிறகாச டபுள் ஆக்க ஏலும் எண்டா தன்னட்ட இருக்கிறத டபுள் ஆக்கி ட்ரிபுள் ஆக்க வேண்டியது தானே!! இன்னும் எதுக்கு வசூல் பண்ணுறா?? ராமர் புகழ் பாடும் ராமாயணமுன் கண்ணன் புகழ் பாடும் மகாபாரதமும் இந்த உலகத்திலேயே பெருய இதிகாசங்கள்...நான் அவங்களை அவதாரம் என்று கூறுவதை எதிர்க்கிறேன்..... ஆனால் அவ்ர்கள் அப்படி கூறப்படுவதற்கு காரணங்கள் உண்டு. இருவரும் அரசர்கள்!! அந்தக்காலத்தில் அரசர்களை வணங்கும் பழக்கம் உண்டு. இவர்கள் இருவரும் தர்மம் தவறாது வாழ்ந்தவர்கள். மக்களுக்கு நன்மை புரிந்தவர்கள்..அதனால் மக்கள் இவர்களை கடவுளாக மதித்தனர்... கடவுளே வந்து பிறந்திருக்கிறார் என புகழ்ந்தனர்...இதுவே மருவி அவதாரம் ஆகிவிட்டனர் இருவரும்!! பிறகு எதையுமே கவிரசத்தோடும் ஒன்றை பத்தாக்கும் கவிஞர்கள் பல புனைகதை புனைந்து காவியமாக்கிவிட்டனர்!! இராமரும் கண்ணனும் ஆரியக்குலத்தில் பிறந்ததனால் விஷ்ணு அவதாரம் ஆகிவிட்டனர்...இதுவே தென்னகத்தில் பிறந்திருந்தல் சிவன் அவதாரம் ஆகியிருப்பர்..... மூடனே மூளைகொண்டு யோசி....

Senthuran said...

அம்மா பகவானின் மகிமைகள்

இந்த பாடலை கேளுங்கள் அப்பொழுது உண்மையை உணா்ந்து கொள்வீா்கள்.

http://www.facebook.com/video/video.php?v=256115706896

Anonymous said...

enna solrathu ende puriyella

kypn said...

Senthuran, எப்பொழுது மயூரனுக்கு பதில் வரும்???

சும்மா அள்ளி விட்டு இருக்குறீங்கள் போல..:p

senthoorkumar said...

செந்தூரனுக்கு எனது இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.
உங்களது அம்மா பகவான் தங்களை பார்க்க பணம் வாங்குகிறார்கள் என்று அதற்கு காரணம் கேட்ட கனககோபியின் கேள்விக்கு தாங்கள் இன்னும் பதில் அளிக்க வில்லை என்பதை ஞாபகப் படுத்துகிறேன்.

தாங்கள் கூறுவது போல் எதாவது இல் நடக்கா விட்டால் நான் உங்களை தொடர்பு கொள்ள விரும்புகிறேன். அதற்கு தங்களின் தொடர்பு இலக்கத்தை எனக்கு தர முடியுமா? மறந்து விட வேண்டாம் இன்னும் இரண்டு வருடங்களில் நீங்கள் சொன்ன நாள் வந்து விடும்.

நான் ஒன்றும் கடவுள் நம்பிக்கை இல்லாதவன் இல்லை. தங்களை விட அதிகமாக கடவுள் நம்பிக்கை உள்ளவன் என்று ஆணவமாக கூறி கொள்வதில் பெருமை அடைபவன். ஆனால் இந்த மாதிரி போலி சாமியார்களினால் தான் எமது இந்து மதம் தனது பொலிவை இழக்கிறது. இதை என்னும் போது தான் கவலையாய் உள்ளது. பொது மக்கள் நடமாடும் இடங்களிலும் ஆலயங்களிலும் குண்டு வைக்கும் தீவிரவாதிகள் இந்த கள்ள சாமியாரின் கட்டிலுக்கு அடியில் வைக்க கூடாதா?????

Anonymous said...

senthuran is the next amma bhagavan

Senthuran said...

எதற்காக என்னுடைய பெயரைப் பயன்படுத்தி, உங்களுடைய Videoவை Post செய்துள்ளீர்கள்? அதற்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை. மயூரன் தயாரித்த அந்த பாடலை அவரது பெயரிலேயே வெளியிட்டிருக்கலாமே? பார்ப்பவர்களுக்கு சந்தேகம் ஏற்படும் வகையில் நடந்து கொள்வது பொருத்தமற்றது...

Unknown said...

bobby அருமை தான்கால் கூருவது முட்ட்ரிலும் உன்மை...... இன்த ஸென்தமிழ் பொன்ட்ர அட்கல் திருன்துவது கிடயது ..... னாம் எவலவு ஸொன்னலும் இவர்கல் திருன்த பொவது இல்லை.... இவரை பொல் அட்கலல் தான் மக்கல் எமருகிருர்கல்.....