Wednesday, July 23, 2008

ஒரு நிமிடம் வா


என் காதல் கடலை விட ஆழமானது
வானை விட உயர்ந்தது என்ற
அடைமொழிகள் கூற விரும்பவில்லை
நான் இறக்கும் தருவாயில் என்னருகில்
ஒரு நிமிடம் வர்

நான் சுவாசித்த உன் வாசங்களைப் பார்
நான் யாசித்த உன் குரல்தனைக் கேள்
நான் எனக்குள் தீட்டிய உன்
வண்ணங்களை மட்டுமல்ல
வர்ணனைகளையும் வந்து பார்
நான் நேசித்த உன்னை நீ
எனக்குள் வந்து பார்

உன் பெயர் சொல்லி என் அணுக்கள் துடிக்கும்
உன் குரல் கேட்டு என் செல்கள் வெடிக்கும்
உனை பார்த்துக்கொண்டே என் இதயம் சுருங்கி
இதயம் சுருங்கி விரியும்
உனை நினைத்துக்கொண்டே என் ஜீவன்
எனை விட்டுப் பிரியும்.

--
மீரா

No comments: