Wednesday, June 11, 2008

அந்தக் கடிகாரம்..




சொட்டாய் விழுந்த மழைத்துளி
சகதியுடன் சங்கமித்துக்கொண்டது..
கிழிந்திருந்த ஒரு பொத்தல் துணி
அவனை உடுத்திக்கொண்டது...
மழை
அவனில் ஒதுங்கியது...
அவசரப்பாதணியொன்று
அவனை மிதித்துவிட்டுப் போனது...
அவனில் எந்த அசைவுமில்லை...
..
...
....
.....
இதுவரை மௌனம் காத்த
அந்தக் கடிகாரம்
இரண்டு நிமிடம் நிதானித்து
பின் அலறியது.......

--
பிரம்மியா கிருபநாயகம்,
மட்டக்களப்பு