தன் கூட்டினை
தொலைத்து நிற்கிறது அந்தப் பறவை...
புதிதாய் உதித்திருந்தன
பல பச்சைக் கூடாரங்கள்...
இரத்தமும் சீழுமாய்
சிதறிக்கிடக்கும்
அதன் இனச்சிதிலங்கள்...
கூடும்
தன்னுடன் கூடிய கூட்டமும்
சிதைந்த கவலை அதற்கு..
முடிந்தவரை கொத்திப்பார்த்தது
கூரைகளை...
உடைந்ததென்னவோ
அதனலகு மாத்திரம் தான்..
இருப்பு அற்றுப்போன பின்
இறகுகள் இனியெதற்கு...
ஒவ்வொன்றாய்
பிய்த்துப்போட ஆரம்பித்தது மெதுவாக...
--
பிரம்மியா கிருபநாயகம்,
மட்டக்களப்பு
1 comment:
that doesn't happen everyday. wish you all the best.
Post a Comment