Friday, June 20, 2008

அழியும் பேரினவாதம்!!!




பணத்தில் நாம் ஏழை
மனத்தில் நாம் ஒரு கோழை….
பெருகிவரும் பேரினவாதத்தின் முன்..

பெருகிவரும்
கொலைகளையும் தாக்குதலையும்
கண்டு மௌனிக்கும் மௌனிகள்
ஆனாலும்; நாமும் மனிதர்கள்;

என்றேனும் ஒரு நாள்
நாம் பூமியில் அழிவோம் என்று
யாரும் நினைத்தால் அவர்கள்
அழிந்து போவார்கள்…

நாம் மண்ணில் பாதம்
பதித்த போது பரவிய
யுத்தம் வேறு ஆனால் இன்று
பேரினவாதிகளின் அடக்கு முறை
அதிகாரம் யுத்தம் செய்கிறது

நாம் ஒவ்வொரு இறப்பிலும் கண்விழிப்போம்…
ஒவ்வொரு இறப்பும் எமக்கு ஒரு
பிறப்பு மண்ணில்…
அதுவும் தமிழன் என்பது தனிச் சிறப்பு…

மண்ணில் மனிதஇனம் அழிந்தாலும்
அழியாது நம் தமிழினம்
நாம் கோழை இனம் இல்லை
எப்போதும் “வாழை” இனம்…..


--
நதி,
சல்லி

No comments: