Monday, June 9, 2008

மனிதன்




இறந்துபோன அதை
இறக்காத எல்லோரும்
சுமந்தனர்
தடாகம் பாராட்டியது
தண்ணீர் பாராட்டியது
தாமரை பாராட்டியது
மனிதனின் வாய் மட்டும்
இறந்துபோன அதை விட
இழிந்தே கிடந்தது
பாராட்ட மனம் இன்மையால்

--
பெரிய ஐங்கரன்
புலோலி தெற்கு

No comments: